பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 5 பேர் பலி !

0
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 5 பேர் பலி




இதன் வெளியே நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு திடீரென வெடித்து சிதறியது.
போலீஸ் வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் இந்த தாக்குதலு க்கு எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings