இரண்டே விபத்து 15 பேர் பலி - தமிழகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த சோகம் !

0
கள்ளக் குறிச்சி அருகே ஏமப்பேர் என்ற இடத்தில் தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானது. அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த இவ்விபத்தில், சென்னையி லிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பஸ்சில் பயணித்த 2 பேரும் பலியாயினர். 
தமிழகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த சோகம்



ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் கிராமத்தி லிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்றது. வேன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் கருங்குளம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
15 பேர் பலி ஒரே நாளில் நிகழ்ந்த சோகம்



இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஜெகதீஸ்வரன், அருணாசலம், முத்துலட்சுமி, பாக்ய லட்சுமி, நித்தீஷ், அனீஸ் பாண்டி (குழந்தை). விபத்தில் பலியானவர்கள் திருத்தங்கல் இந்திராநகர் பாண்டியன் நகர் 6 -வது தெருவை சேர்ந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணை யில் தெரிய வந்துள்ளது.  
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings