சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் !

0
பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. பிரதமருடன் 24 காபினெட் அமைச்சர்களும், தனிப்பொறுப் புடன் கூடிய இணை அமைச்சர்கள் 9 பேரும், இணை அமைச்சர்கள் 24 பேரும் பதவி ஏற்றனர். புதிய மந்திரிகளுக்கு நேற்று மதியம் இலாகா ஒதுக்கீடு செய்து அறிவிக்கப் பட்டது. 
சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன்


இதைத் தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை யின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன் பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயி களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டது.
அந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயி களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. 12 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தால் பயன் அடைந்தனர். நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதுபற்றி ஆய்வு செய்யப் பட்டது. 

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் விரிவுபடுத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது. இதன் மூலம் கூடுதலாக 2 கோடி விவசாயிகள், அதாவது 15 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள். விவசாயி  களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் கூடுதலாக நிறைய பேர் பயன்பெற கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதன்படி விவசாயி களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் ரூ.10,774 கோடியில் செயல் படுத்தப்படும்.  சிறு விவசாயி களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும். மொத்தத்தில் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் 5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.


ஓய்வூதிய திட்டத்துக்கு பதிவு செய்த விவசாயி திடீரென மரணம் அடைந்து விட்டால் அவரது மனைவி 50 சதவீத ஓய்வூதியத்தை பெற முடியும். பிரதான் மந்திரி கிசான் பென்சன் யோஜனா என்ற இந்த திட்டத்தில் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் தானாக முன் வந்து இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் குறித்து மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-
விவசாயிகள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். விவசாயிகள் எவ்வளவு தொகை செலுத்துகி றார்களோ, அதே அளவுக்கான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார். கிராமப்புற பொருளாதார த்தை சரி செய்யவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியை மேம்படுத்தவும் விவசாயிகளு  க்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இது நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் போன்று சிறு வியாபாரிகளுக்கும் ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்துக்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு முதலில் ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்பட்டது. 

ஆனால் நேற்று அமைச்சரவை யில் இந்த திட்டத்துக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப் பட்டதால் 2019-2020ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.87,217 கோடி செலவாகும் என்று தெரிகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடைக்காரர்கள், சில்லரை வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் பயன் பெறலாம். ஜி.எஸ்.டி.யில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழ் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள வியாபாரிகள் தான் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.


அந்த பட்டியலில் உள்ள 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அப்படி பதிவு செய்த சிறு வியாபாரி களுக்கு அவர்களது 60 வயதுக்கு பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். நாடு முழுவதும் 3 கோடி சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தின்படி பயன் பெறுவார்கள்.
அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் 5 கோடி சில்லரை வியாபாரிகள் சேர வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். சிறு வியாபாரிகள் தங்கள் ஓய்வூதிய திட்டத்தில் எந்த அளவுக்கு பணம் செலுத்துகி றார்களோ, அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும் என்பது குறிப்பிடத் தக்கது... மாலைமலர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings