தாயுடன் தவறான உறவு - குத்தி கொன்ற மகன் !

0
சிவகங்கை நேரு பஜார் வீதியை சேர்ந்த தமிழ்ச் செல்வன் என்பவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், வெளி நோயாளிகள் பிரிவில், தற்காலிக மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். திருமணமாகி, மனைவி பிரிந்து சென்றதால், தனியே வசித்து வரும் இவர் ஒக்கூரைச் சேர்ந்த சாந்தி என்பவருடன் தவறான உறவு கொண்டிருந்த தாக கூறப்படு கிறது.


இதையறிந்த, சாந்தியின் மகன் அருண்குமார் இருவரையும் கண்டித்து வந்துள்ளார். ஆனால், இருவரும் அதனை பொருட்படுத்தா ததால் அருண் குமார், தனது தாயாரை வீட்டிலேயே, அடித்து உதைத்து, கட்டிப் போட்டதாக கூறப்படு கிறது. இதை அறியாது, பலமுறை போன் செய்தும் அந்த பெண் எடுக்காததால் அவருக்கு மெசேஜ் அனுப்பி யிருக்கிறார் தமிழ்ச் செல்வன். 

ஏற்கனவே, தவறான உறவு வைத்திருந்த தால், தனது தாயாரை கட்டிப் போட்டு வைத்திருந்த அருண்குமார், தமிழ்ச் செல்வன் அனுப்பிய மெசேஜ்-ஐ கண்டு மேலும் ஆத்திர மடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதே கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அருண்குமார், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று தமிழ்ச் செல்வனை எச்சரித் திருக்கிறார்.

அது சமயம், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு முற்றிபோக, தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை அருண் குமார் எடுத்து தமிழ் செல்வனை ஓட, ஓட விரட்டி, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். 

அங்கிருந் தவர்கள் சம்பவத்தை கண்டு அருண்குமார் மடக்கிப் பிடித்து, அறையில் அடைத்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அருண் குமாரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)