அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவேடு !

0
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் உபரி ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்கு மாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 


நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை யின் போது உபரி ஆசிரியர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் இருப்பதா கவும் அவர்களுக்கு ஆண்டுக்கு 444 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப் படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை கேட்டறிந்த நீதிபதிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மை யில்லா மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நலன் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க சில உத்தரவுகளை பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதனை யடுத்து வழக்கின் விசாரணை யினை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings