கணவன் அழைக்க வராததால் மனைவியை துடிக்க விட்ட கொடூரம் !

0
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தை சார்ந்தவர் முருகன் (வயது 52). இவர் விவசாய தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கருப்பாயி (வயது 45). இவர்கள் இருவருக்கும் கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ள நிலையில்., கார்த்திக் ராஜா ரெட்டியார் சத்திரத்தில் உள்ள தனது தாத்தா இல்லத்தில் வசித்து வருகிறார்.
மனைவியை துடிக்க விட்ட கொடூரம்


முருகனுக்கும் அவரது மனைவியான கருப்பாயி க்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு சமயத்திற்கு மேலாக பொறுக்க முடியாத கருப்பாயி கணவரிடம் சண்டையிட்டு தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். தன்னிலை அறிந்து கணவன் அழைத்தும்., அவர் மீண்டும் கணவருடன் வர மறுத்து விட்டார்.

இந்த நிலையில்., நேற்றிரவு நேரத்தில் மனைவியை காணுவதற்கு முருகன் அவரது இல்லத்திற்கு வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வளர்ந்துள்ளது. பின்னர் மீண்டும் காலையில் பணிக்கு செல்வதற் காக கருப்பாயி சென்று கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இடைமறித்த முருகன்., மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சித் துள்ளார்.


கணவர் அரிவாளுடன் வருவதை கண்டு அதிர்ச்சி யடைந்த கருப்பாயி ஓட்டம் பிடிக்கவே., அவரை துரத்தி சென்று வெட்டி சாய்த்தார். இதில் நிலை குலைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி யடைந்த மக்கள்., இது குறித்து காவல் துறையினரு க்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., கருப்பாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings