அண்ணன் இறந்த விரக்தியால் பெண் பட்டதாரி தற்கொலை !

0
அண்ணன் இறந்த விரக்தியில், பெண் பொறியியல் பட்டதாரி ஒருவர், தன் தாயுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி (வயது 45). இவருடைய மகள் சர்மிளா(22). பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
அண்ணன் இறந்த விரக்தியால் பெண் பட்டதாரி தற்கொலை !


மாலதியின் கணவர் ரமேஷ், கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்து தனியாக சென்று விட்டார். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்தார். பெங்களூருவில் வேலை செய்து வந்த அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவர் ரமேஷ், விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற நிலையில், மகன் ராஜ்குமாரும் தற்கொலை செய்து கொண்டதால் மாலதியும், சர்மிலாவும் மனவேதனை யில் இருந்தனர். இந்நிலையில் விரக்தி அடைந்த சர்மிளா, தனது தாய் மாலதியுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களது உடல் இரண்டு நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் கிடந்தது. இது பற்றி கொளத்தூர் போலீசாரு க்கு தகவல் கிடைத்தது இதை யடுத்து வீட்டின் பூட்டை உடைத்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings