திருமணம் செய்ய மறுத்த விதவை பெண்ணுக்கு நேர்ந்த கதி !

0
குமரி மாவட்டத்தில் 35 வயதுள்ள விதவைப் பெண்ணிடம் திருமணம் செய்யும்படி வற்புறுத்தி யிருக்கிறார் 28 வயது இளைஞர் ஒருவர். விதவைப் பெண் திருமணத்துக்கு மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரைச் சேர்ந்தவர் கிரிஜா (35). 
விதவை பெண்
இவரது கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இதையடுத்து கிரிஜா தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவந்தார். கிரிஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜாண்றோஸ் (28) அடிக்கடி உதவி செய்துவந்துள்ளார். இது இருவருக்கும் பழக்கமாக மாறியுள்ளது. 


ஜாண்றோஸ் அடிக்கடி கிரிஜா வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். இதற்கிடையில் கிரிஜாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஜாண்றோஸ் கூறியுள்ளார். திருமணத்துக்கு கிரிஜா மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கிரிஜா வீட்டுக்குச் சென்ற ஜாண்றோஸ் திருமணத் துக்கு வற்புறுத்தி யுள்ளார். 

வழக்கம் போல கிரிஜா மறுத்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த ஜாண்றோஸ் கையில் எடுத்துச் சென்ற ஆசிட்டை கிரிஜா முகத்தில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வலியால் அலறிய கிரிஜாவை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.
ஜாண்றோசை அப்பகுதியினர் தேடிப்பார்த்த போது அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் கிடந்துள்ளார். ஜாண் றோஸை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை ஜாண்றோஸ் எடுத்து வந்து கிரிஜா மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் கிரிஜாவின் பார்வை பறி போனதாகவும் கூறப்படுகிறது. வயது வித்தியாசம் பாராமல் ஏற்பட்ட பழக்கத்தால் நடந்த இந்தச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)