விபத்தில் சிக்கிய தி.மு.கவினரை காப்பாற்றிய அ.தி.மு.க அமைச்சர்கள் !

0
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் விபத்தில் சிக்கிய தி.மு.க பிரமுகரை மீட்ட அ.தி.மு.க அமைச்சர்கள், தொண்டர்கள் உதவியுடன் தங்களது பாதுகாப்பு வாகனத்தில் திருச்சி அரசு மருத்துவ மனைக்குச் சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.
AIADMK ministers who saved DMK


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் புதுக்கோட்டை யில் நடைபெற்ற நலத்திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 

பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இருவரும் பாதுகாப்பு வாகனங்களோடு இரவு காரில் கிளம்பினர். விராலிமலை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, ஓரிடத்தில் மக்கள் அதிகமாகக் கூடியிருப்பதைக் கண்டு காரை நிறுத்தச் சொல்லி அமைச்சர்கள் இருவரும் காரை விட்டு கீழே இறங்கினர்.

இறங்கி விசாரித்ததில் விராலிமலை அருகே சமத்துவ புரத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் பிச்சைக் கண்ணு என்பவர் வாகன விபத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. 
அ.தி.மு.க அமைச்சர்கள்


உடனடியாக, அமைச்சர்கள் இருவரும் போலீஸாரிடம் பேசி தங்களது பாதுகாப்புக் காக வந்த பாதுகாப்பு வாகனத்தில் தொண்டர்கள் உதவியுடன் அவரைத் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியவரை ஆம்புலன்ஸ் வரும் வரையிலும் காத்திருக்க வைக்காமல் உடனடியாக பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்களின் செயலைக் கண்டு அங்குக் கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings