நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை நாளை விடுவிப்போம் !

0
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படை யில் நாளை விடுவிப்ப தாக பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித் துள்ளார். 
இந்திய விமானியை நாளை விடுவிப்போம்
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே யான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால், இந்திய விமானியை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவெடுக் கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித் திருந்தது.


இந்நிலையில், இந்த விவகாரத்தை மேலும் பெரிதுப் படுத்த விரும்ப வில்லை என்றும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொலைபேசி வாயிலாக நேற்று பேச முயற்சி செய்ததாக வும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித் துள்ளார்.

இதன் மூலம் நாங்கள் பயந்துவிட்டோம் என்று எண்ணி விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனை யுமின்றி இந்திய விமானியை நாளை விடுவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கர வாதிகள் முகாமை அழித்தது. 

இதை யடுத்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங் களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings