எடப்பாடி தரப்புக்கே இரட்டை இலை - உயர்நீதிமன்றம் !

0
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அதிமுக வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டதை எதிர்த்து, சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
எடப்பாடி தரப்புக்கே இரட்டை இலை
இந்த வழக்கு விசாரணை யின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், கட்சியில் பொதுச் செயலாளர் பதவியையே ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணி நீக்கி விட்டதாகவும், அதற்கு அவர்களு க்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.

மேலும், அரசியல் மாற்றத்தின் அடிப்படை யில் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்த தாகவும், தங்கள் தரப்புக்கு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப் பட்டதாகவும் அவர் வாதிட்டார். 


எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தேர்தல் ஆணையம் முறையாக, அனைத்து தரப்புக்கும் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கி, அதன் பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது எனக் கூறினார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 8-ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இதனிடையே, இந்த வழக்கில் 4 வாரத்திற் குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித் திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித் திருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கே இரட்டை இலைச் சின்னம் சொந்தம் என்றும், 

ஓபிஎஸ் -ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், இதில் டிடிவி தினகரனுடைய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings