தனது மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரை ஐஏஎஸ் அதிகாரி அடித்து உதைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் மாவட்ட கலெக்டராக இருப்பவர், நிகில் நிர்மல்.
இவரது மனைவி நந்தினி கிருஷ்ணன். நந்தினிக்கு ஒரு இளைஞர் சமூக வலை தளத்தில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பிவந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்திவந்த மேற்கு வங்க போலீஸார், பினோத் சர்கார் என்ற இளைஞரை நேற்று முன்தினம் கைதுசெய்தனர்.
இந்தத் தகவல் ஐஏஎஸ் அதிகாரி நிகிலுக்கு தெரிவிக்கப் பட்டது. உடனே, தனது மனைவி யுடன் இளைஞர் அடைத்து வைக்கப் பட்டிருந்த காவல் நிலையத் துக்கு வந்தார் நிர்மல்.
அங்கு வந்ததும், அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினார். இதை அங்கிருந் தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில், நிகிலின் மனைவி நந்தினி காவலர் களிடம் `பிரம்பு இருக்கிறதா' எனக் கேட்கிறார். இந்த வீடியோ வைரலாக, ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சைக்கு உள்ளானார்.
மேலும்
உடனடியாக அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டார். இதற்கிடையே, நடந்த சம்பவங் களைக் கூறி, `நிகில் உண்மையான ஹீரோ' என்று புகழ்ந்து, அவரது மனைவி நந்தினி ஃபேஸ் புக்கில் பதிவிட் டுள்ளார்.
Thanks for Your Comments