சரக்கு லாரிகளுக்கு திம்பம் மலைப்பாதையில் விதிமுறை அமல் !

0
தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலைப் பாதை சாலை வழியாக விதி முறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிய லாரிகள் அனுமதிக்கப் படுவதால் 


வாகனங்கள் பழுது மற்றும் விபத்து காரண மாக பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நேற்று முதல் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. 

அதன்படி திம்பம் மலைப் பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து, கார், டெம்போ, ப் வேன் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப் பட்டன. 

காலை முதல் மாலை 6 மணி வரை சரக்கு லாரிகள் மட்டுமே மலைப் பாதையில் அனுமதிக் கப்படும் என காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings