சபரி மலையில் திருநங்கை களுக்கு அனுமதி மறுப்பு !

0
சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக் குட்பட்ட


பெண்களை யும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தர விட்டது. 

இதை தொடர்ந்து அனைத்து வயது பெண்களை யும் கேரள மாநில அரசு அனுமதித் துள்ளது. 

இதைக் கண்டித்து பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் 

போராட்டம் நடத்தின. கோவிலுக்கு செல்ல முயற்சி செய்த பெண்கள் திருப்பி அனுப்பப் பட்டனர்.

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், சபரி மலைக்கு பக்தர்கள் எந்தவித 

சிரமமும் இல்லாமல் வந்து செல்லவும் கேரள போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

அந்த வகையில் சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்ச மாக நீட்டித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சபரி மலையில் தரிசனம் செய்ய திருநங்கை களுக்கு அனுமதி மறுக்கப் பட்ட சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.


கோட்டயம் மற்றும் எர்ணா குளத்தை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, திருப்தி, 

அவந்திகா, ரஞ்சுமோல் சபரி மலைக்கு இருமுடிகட்டி அய்யப்பனை தரிசிக்க சென்றனர். 

எரிமேலி வழியாக பம்பைக்கு செல்ல முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் விசாரணை நடத்தியது. 

விசாரணை யின் போது, முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை 

கோவிலு க்கு வந்துள்ளோம் என்று திருநங்கைகள் போலீஸா ரிடம் தெரிவித்தனர். 

திருநங்கை களை கோவிலுக்கு அனுமதித் தால் போராட்டம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று போலீஸ் கருதி யுள்ளது. 

இதனை யடுத்து அவர்களுக்கு கோவிலு க்கு செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவை கூறி கேள்வி எழுப்பிய போது, சட்டம் ஒழுங்கு

சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவர்களை எரிமேலி க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எருமேலி யில் போலீஸா ருடன் திருநங்கைகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட் டுள்ளனர். 

பின்னர் பெண் போலீஸார் சமாதானப் படுத்தி அவர்களை பாதுகாப் புடன் கோட்டயம் அனுப்பி வைத்துள்ளனர். 

இவ்விவகாரம் சர்ச்சையாகி யுள்ளது. இது தொடர்பாக அனன்யா பேசுகையில், பெண்கள் அனுமதி தொடர்பாக நான் பேசவர வில்லை. 

நான் பேசுவது எல்லாம் திருநங்கை களுக்கான அனுமதி தொடர்பாக தான். 

நாங்கள் கோவிலு க்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறுகிறார்கள்.

இது தொடர்பாக பத்தினம் திட்டா ஆட்சியரிடம் முறையிட்டு பாதுகாப்புடன் கோவிலு க்கு அனுப்ப கோரிக்கை விடுப்போம். 

நாங்கள் முறைப்படி விரதம் இருந்து, இரு முடியுடன் சபரி மலைக்கு வந்தோம். 

ஆனால் போலீஸார் எங்களை தகாத முறையில் பேசி பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர் என்று கூறி யுள்ளார்.

பெண் உடையில் இருப்பதால் கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்றனர். 


அதன் பின் ஆண்கள் உடையில் அணிந்த பின்பு வாருங்கள் என்றனர். பின்னர் நாங்கள் 

ஆண்களா? பெண்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இல்லை திருநங்கைகள் என்று கூறினோம். 

பின்னர் எங்களை அழைத்து வந்த டிரைவரை யும் கடுமை யாக திட்டினர் என திருநங்கை கள் கூறி யுள்ளனர்.

இது தொடர்பாக திருநங்கை கள் வேதனை யுடன் பேசியை வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings