மாணவர் களுடன் தொடர்பு படுத்தியதால் மாணவிகள் தற்கொலை முயற்சி !

0
விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரத்தை அடுத்த அரசம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் 35 மாணவ, மாணவியர் பயில் கின்றனர். 


இருபாலர் பயிலும் அப்பள்ளி யில் கடந்த 12-ம் தேதி மாணவிகள் சிலரை மற்ற மாணவர் களுடன் 

தொடர்பு படுத்தி ஒரு சில மாணவர்கள் வகுப்பறை கரும் பலகையில் நையாண்டி செய்து எழுதி யுள்ளனர். 
இதைக் கண்ட மாணவிகள் 5 பேர் மன முடைந்து பள்ளியின் இடை வேளை யிலேயே வீட்டிற்குச் சென்று எலி மருந்தை தின்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுக்கவும், பெற்றோர் அவர்களை சங்கராபுரம் 

அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை யளிக்கப் பட்டு வீடு திரும்பி யுள்ளனர்.

பின்னர் மீண்டும் நேற்று வயிற்றுவலி, வாந்தி என கள்ளக் குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டு, 


பின்னர் மேல் சிகிச்சைக் காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இது தொடர்பாக சங்கரா புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)