லட்சக்கணக் கான பிரம்மிக்க வைக்கும் கார்கள் !

0
தேவை குறைவாக இருக்கும் போது அளவுக்கு அதிகமாகத் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் வர்த்தக ரீதியாக தோல்வியைச் சந்தித்து விடும். 
தயாரிக்கப் படும் பொருளின் விலை அதிகம் என்றால் அவ்வளவு தான். 

சில பொருட் களை சில வருடங்கள் வரை விற்காமலேயே பத்திரப் படுத்தி, தேவை அதிகரிக்கும்போது விற்று விடலாம். 


ஆனால் எவ்வளவு நாட்கள் என்பது மிக முக்கியம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் 2009 ஆம் ஆண்டு 

அதிகரித்த கார் மோகம் இன்று மிகப்பெரிய துருத் தொழிற் சாலைகளை உருவாக்கி யுள்ளது. உண்மை தான். 

சுமார் பத்து ஆண்டு களுக்கு முன்னர் தயாரித்த பல லட்சக் கணக்கான கார்களை 

விற்க வழி யில்லாமல் நிறுத்தியே வைத்திருக் கின்றன அந்தந்த தொழிற் சாலைகள்.

அனைத்துக் கார்களை யும் பாதுகாக்க முடியாமல் வெட்ட வெளியில் நிறுத்தி யிருக்கிறது அந்த நிறுவனங்கள். 

இதனால் மழை மற்றும் வெயிலினால் இந்த கார்கள் பாதிக்கப் பட்டுள்ளன. 

தள்ளுபடி மற்றும் கார்களின் விலைக் குறைப்பிலும் இந்த நிறுவனங்கள் நாட்டம் செலுத்த வில்லை. 

அதற்குப் பின்னால் ஒரு உளவியலும் உள்ளது. 

தற்போது பாதிப்புக் குள்ளாகி யிருக்கும் இந்தக் கார்களை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். 
இதனால் இதன் விலைகளை மிகவும் குறைக்க வேண்டியிருக்கும். அப்படி செய்யும் பட்சத்தில் 

அடுத்த முறை அதே நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் புதுக் கார்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். 


அதனால் தான் இவ்வளவு கார்களும் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இப்படி நிறுத்தி வைக்கப் பட்டிருக் கின்றன.

இந்த வாகனங்களில் பயன்படுத்தியிருக்கும் உதிரிப்பொருட்கள், மனித ஆற்றல், 

மின்சாரம் என வீணான வற்றின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன. 

சரி, இனி எந்தெந்த நாடுகளில் இப்படி வாகனக் குவியல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகணத்தில் தேவைக்கு அதிகமாகத் தயாரித்த கார்கள் 

வீணாய் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் புகைப் படங்களே இவை.
கார்பி மாகாணத்தில் மறு சுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் 

அடுக்கப் பட்டிருக்கும் கார்களின் எண்ணிக்கையைக் கவனியுங்கள்.

அமெரிக்கா


இந்த உபரி உற்பத்திக்கு அமெரிக்கா வும் விதி விலக்கல்ல. 

அந்நாட்டின் பால்டிமோர் மற்றும் மேரி லேண்ட் ஆகிய நகரங்களி லும் இதே கதை தான். 
அடுத்து நீங்கள் பார்க்கப் போவது அவைகளைத் தான். இந்த இடத்தில் மட்டும் 57,000 கார்கள் 

ஆண்டுக் கணக்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின் றன. 

இவ்வளவு கார்கள் விற்பனை யாகாமல் இருந்தாலும் இன்னும் அந்தந்த நிறுவனங்கள் கார் தயாரிப்பை மட்டும் நிறுத்த வில்லை.
இந்த தொழிற் சாலைகளை நம்பி ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் 

நிறுவனங் களை மூடுவதில் பல விதி முறைகளை விதித்துள்ளது அந்த நாடு.

ஸ்பெயின்


ஸ்பெயினில் உள்ள வேலன்சியா துறைமுகத்தில் இறக்குமதி யான கார்களை 
வைக்க இடமில்லாமல் அங்கேயே நிறுத்தி யிருக்கும் கார் நிறுவனங்கள்.

இத்தாலி
இத்தாலி யில் உள்ள சிவிடாவெச்சியா துறைமுகம் முழுவதும் பயன்படாத நிலையில் பல ஆண்டுக ளாக வைக்கப் பட்டிருக்கும் கார்கள்.

ரஷியா

இவ்வளவு கார்களும் பல ஆண்டுக ளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்ப தால் கடும் சேதமடைந் திருக்கின்றன. 

பல கார்கள் துருப்பிடிக்க ஆரம்பித்து விட்டன. 


எதிர் காலத்தில் இந்த உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை களுள் கழிவு மேலாண்மையே முதல் இடத்தில் இருக்கப் போகிறது. 
காந்தி கூறியதைப் போல் இந்த உலகத்தில் உள்ள குப்பை களைக் கொட்டு வதற்கு நமக்கு இன்னும் இரண்டு உலகங்கள் தேவைப்படும். 

எனவே மறு சுழற்சியை நோக்கி மனிதர்கள் தீவிரமாக இயங்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பதே நிதர்சனம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)