SpaceX நிறுவனத்தின் பிரம்மாண்ட ராக்கெட் எலான் மஸ்க் அடுத்த அதிரடி !

0
அமெரிக்கா வைச் சேர்ந்த தனியார் வானியல் ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) 
விண்வெளித் துறையில் புதிய பரிணாமத் தினைத் திறந்து வைத்துள்ளது. 

கலிபோர்னி யாவில் உள்ள வென்டென்பர்க் ஏவுதளத்தில் (Vandenberg Air Force Base) இருந்து 64 செயற்கைக் கோள்களை 


ஃபால்கான் 9 என்னும் ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்தி ருக்கிறது SpaceX நிறுவனம். 

கடைசி நேரத்தில் கடுமை காட்டிய வானிலை மாற்றங் களை எல்லாம் புறந்தள்ளி வெற்றிக் கொடி கட்டியி ருக்கிறது ஃபால்கான் 9 ராக்கெட்.

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 64 செயற்கைக் கோள்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டிருக் கின்றன. 
SSO-A எனப் பெயரிடப் பட்ட இத்திட்டத் தின் மூலம் இந்த ஆண்டு மட்டும் 19 முறை ராக்கெட் ஏவுதல் நடை பெற்றிருக் கிறது. 

சென்ற ஆண்டு இதே திட்டத்தின் மூலம் 18 முறை ஏவுதல் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

அறிந்து தெளிக!
உலகத்தி லேயே ஒரே நேரத்தில் அதிக செயற்கைக் கோள்களை ஏவியதில் இஸ்ரோ முதலிடத் தில் (104 செயற்கைக் கோள்கள்) உள்ளது.
17 நாடுகளில் உள்ள 37 தனியார் நிறுவனங்களின் சிறு செயற்கைக் கோள்கள் 

இந்த நிறுவனத்தின் மூலமே விண்வெளி க்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. 

இவற்றில் பெரும்பாலும் தொலைத் தொடர்பு சேவைகளுக் காக அனுப்பப் படுபவை யாகும்.


ராக்கெட்டின் பகுதிகள்

ஃபால்கன் 9 ராக்கெட்டினைப் பொறுத்த வரை Fairing எனப்படும் ராக்கெட்டின் முன் பகுதி, இரண்டாம் நிலைப் பகுதி 

மற்றும் முதன்மை நிலைப் பகுதியுடன் கூடிய வெப்ப உமிழ் கலன் ஆகியவை பொருத்தப் பட்டிருக்கும். 

இதில் முன்பகுதியில் தான் செயற்கைக் கோள்கள் வைக்கப்படும். 
முதன்மைப் பகுதியில் மொத்தம் இருக்கும் 9 எஞ்சின் களின் இயக்கத் தினால் ராக்கெட்டானது விண்ணை நோக்கி சீறிப் பாய்கிறது.

லித்தியம் மற்றும் அலுமனிய உலோகக் கலவையால் உருவாக் கப்பட்ட என்ஜினில் திரவ ஆக்சிஜனும் 

ராக்கெட்டில் பயன் படுத்தப்படும் மண்ணெண் ணெயும் எரிபொரு ளாகப் பயன் படுத்தப்படு கின்றன. 

229.6 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இந்த ராக்கெட்டானது 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப் பட்டதாகும்.

மறு சுழற்சி

பிரம்மாண்ட மான இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் வெப்ப உமிழ்கலன் 


மறு சுழற்சிக்கு உட்படுத் தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்த தாகும். 

இந்தத் திட்டத்தில் பயன் படுத்தப்பட்ட இதே கலனானது இதற்கு முன்னர் இரண்டு முறை ராக்கெட் ஏவுவதற்குப் பயன்படுத்தப் பட்டது. 
மேலும் ராக்கெட்டின் முன் முனைப் பகுதியையும் மறு சுழற்சி செய்யும் திட்டம் அந்த நிறுவன த்திடம் இருந்தது.

மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகும் இம்மாதிரி யான திட்டங்கள் மறு சுழற்சியைப் 

பயன் படுத்துவதன் மூலம் செலவினங் களைக் குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தமுறை பூமிக்குத் திரும்பும் முனைப் பகுதி பசிபிக் கடலில் விழும் என்று 

கணிக்கப்பட்டு அதனை பத்திரமாக மீட்க முயற்சிகள் எடுக்கப் பட்டன. 

ஆனால் முனையானது நேரிடை யாகக் கடலில் விழுந்து விட்டது. 

சுமார் 60 லட்சம் டாலர் மதிப்புள்ள அப்பகுதியை கடலில் இருந்து எடுத்து சரி செய்த பின்னர் 


மறுபடியும் ஏவுதலுக்குப் பயன் படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித் துள்ளது. 
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இம்மாதிரி யான திட்டங்கள் மறு சுழற்சியைப் 
பயன் படுத்துவதன் மூலம் செலவினங் களைக் குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 
ஸ்பேஸ் எக்ஸின் இந்தத் திட்டம் இம்முறை தோல்வியைச் சந்தித்தாலும் எதிர் காலத்தில் 
ராக்கெட் இயங்கு பொருள் மறு சுழற்சியில் புது சகாப்தம் ஒன்றினைப் படைக்கும் என்பதில் சந்தேக மில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)