பிரான்ஸ் அரசு பின் வாங்கியது - போராட்டத்திற்கு வெற்றி !

0
பணிந்தது... பணிந்தது... போராட்டத்திற்கு பிரான்ஸ் அரசு பணிந்துள்ளது.சில வாரங்கள் வன்முறை போராட்டங் களுக்கு வழிவகுத்த எரி பொருளுக்கான வரி விதிப்பை இடை நிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித் திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப் படியான வரி விதிப்பை அரசு கொண்டு வந்துள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மின் கட்டணமும் உயர்த்தப் படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இது மக்களை கொந்தளிப் பான நிலைக்கு தள்ளி யுள்ளது. 

இதனால் இந்த போராட்ட ங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தி யுள்ளன. 
இதனால் வேறு வழியின்றி பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோன் 2019 ம் ஆண்டு முதல் கொண்டு வர திட்ட மிட்டிருந்த எரிபொருள் வரி உயர்வை தற்காலிக மாக ரத்து செய்ய முடிவெடுத் துள்ளார்.

யெல்லோ ஜாக்கெட் என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக் காட்டுவதாக அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings