சூரியன் நினைத்தால் தாமரையும் கருகும் - ஸ்டாலின் நறுக் பதிலடி !

0
தண்ணீர் இல்லாத தமிழகத்தில் புல்லே முளைக்காது இதில் தாமரை எங்கே மலரும் என ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். 


இதற்கு தமிழிசை, இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். 

குளம் நிறையும். தாமரை மலரும். ஊழல் விஞ்ஞானி களை விரட்டி யடிக்க செயற்கை மழை நீர் வரவைத்தாகி லும் 

குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம் என பதில் அளித்தார். 

தற்போது தமிழிசை யின் டிவிட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஸ்டாலின். 

அதாவது, சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: 

தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும் என டிவிட்டரில் பதிவிட் டுள்ளார். 


ஸ்டாலினு க்கும் தமிழிசை க்கும் பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாக தான். 

ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன் என்று திசை மாறி போய்க் கொண்டிருக் கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings