பால் குடித்த மார்பு.. சுமந்த வயிறு.. இரக்கமில்லாமல் கொன்ற தேவிப்பிரியா !

0
தாயின் வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கொன்றது தேவிப்பிரியா தானாம். அந்த இரு நண்பர்களும் பானுமதியின் வாயை மட்டுமே பொத்தினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது. 
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருக நாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி (50).

இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களது 2-ஆவது மகள் தேவிப் பிரியா (19), பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

இவருக்கு சுரேஷ் (24) என்ற இளைஞருடன் இன்ஸ்டா கிராமில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

தீர்த்து கட்டலாம்


தேவிப் பிரியாவின் காதல் விவகாரம் பானுமதிக்கு தெரிய வந்தது. இதனால் அவரை பானுமதி கண்டித்தார். 

எனவே சுரேஷுடன் சேர்ந்து வாழ முடியாது என தேவிப் பிரியா கருதி, இதை சுரேஷிடமும் கூறினார். பின்னர் சுரேஷும் பானுமதியை தீர்த்து கட்டி விடலாம் என ஐடியா கொடுத் துள்ளார்.

வீட்டுக்கு அனுப்பிய

பின்னர் தேவிப்பிரியா தன்னை வந்து அழைத்து செல்லுமாறு சுரேஷிடம் கேட்டுள்ளார். 

அதற்கு அவர் தன்னால் வரமுடியாது என்று கூறி கும்பகோணத்தை அடுத்த திருவிடை மருதூரை சேர்ந்த விக்னேஷ், திருபுவன த்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோரை தேவியின் வீட்டுக்கு அனுப்பி யுள்ளார்.

வாயை பொத்திய

அவர்கள் இருவரும் வந்தவுடன் தேவிப்பிரியா பெட்டி படுக்கையுடன் வெளியே செல்ல முயற்சித்தார். இதற்கு தாய் பானுமதி அனுமதிக்க வில்லை. 

இதனால் ஆத்திரம் அடைந்த தேவிப் பிரியா, பானுமதி யின் வாயை பொத்தி கொள்ளுமாறு விக்னேஷிடமும் அஜித்திடமும் கூறினார்.

கூட்டத்தோடு கூட்டமாக

பின்னர் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு பானுமதியின் வயிறு, கழுத்து, மார்பு பகுதிகளில் தேவிப் பிரியா சரமாரியாக குத்தினார். இதில் சரிந்து விழுந்தார் பானுமதி. இருவரும் தப்பியோடி விட்டனர். 

அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனால் தேவிப்பிரி யாவும் ஒன்றும் தெரியாதது போல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விட்டார்.

ரத்தக்கறை


இதனிடையே தப்பி ஓடிய விக்னேஷ், அஜித்துக்கு அப்பகுதியை விட்டு வெளியேற வழித் தெரிய வில்லை. இதனால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த வர்களிடம் வழி கேட்டுள்ளனர்.

அப்போது சட்டையில் ரத்தக் கறை படிந்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

சோகம்

அதற்குள் மேல் சிகிச்சைக் காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானுமதி சிகிச்சை பலனின்றி பலியாகி விட்டார். 

10 மாதம் சுமந்த வயிறு, 24 மாதங்கள் பால் குடித்த மார்பு ஆகிய பகுதிகளில் தேவிப்பிரியா குத்திக் கொன்றது 

பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தேவிப்பிரியா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்க ப்பட்டுள்ளார். காதலன் சுரேஷும் கைது செய்யப்பட்டு விட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings