உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும் !

0
உணவு, நீரில் தொடங்கி நாம் சுவாசிக்கும் காற்று வரை எல்லா வற்றிலும் மாசு நிறைந்திருக்கிறது. நம் உடலுக்குள் செல்லும் மாசு, கழிவுகளோடு கலந்து வெளியேறி விடும். 
உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும் !
அவற்றில் சில கழிவுகள் மட்டும் உடலுக் குள்ளேயே தங்கி நச்சாக மாறி விடுகின்றன. அப்படி உடலில் தங்கும் நச்சுகளை இயற்கை யாக வெளியேற்றும் வழிகள்…

அதிகம் பதப்படுத்திய, வறுத்த, பொரித்த, பாக்கெட்டு களில் அடைக்கப் பட்ட உணவுகளே உடலில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும். 

எனவே பழங்கள், காய்கறி களை முடிந்த வரை பச்சையாக, ஃப்ரெஷ்ஷாக, நீரில் கழுவிச் சாப்பிடுங்கள்.
உடலைச் சுத்தப் படுத்த, நீரைவிடச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை. ஒரு நாளில் அதிக பட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை நீர் அருந்தலாம்.

தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உடற் பயிற்சி யின் போது வெளியேறும். வியர்வை அனைத்தும், உடலில் சேர்ந்திரு க்கும் நச்சுகள் என்பது குறிப்பிடத் தக்கது.
உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும் !
காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்நீர் பருகலாம். உடலுக்குள் தேங்கி யிருக்கும் நச்சுகளை, கழிவோடு கழிவாக வெளியேற்ற அது உதவும். 

லெமன் டீ அல்லது கிரீன் டீ வகைகளை, இடைவேளை யின் போது பருகலாம். உணவில் மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்ற வற்றைச் சேர்ப்பதும் பலன் தரும்.
வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு நாளில், காய்கறி மற்றும் பழங்களை மட்டுமே முழுமை யாகச் சாப்பிடும்படி அமைத்துக் கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)