HIV, AIDS தாக்காமலிருக்க முன் யோசனைகள் !





HIV, AIDS தாக்காமலிருக்க முன் யோசனைகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சில எளிய தடுப்பு முறைகள்- உடல் உறவு வைத்துக் கொள்பவரது உடல் நலம் பற்றித் தெரியாமல் உடலுறவு கொள்ளக்கூடாது.


திருமணத்திற்கு முன் எவரு டனாவது உடலுறவு வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறையும் ஆண் உறையை உபயோகப்படுத்த வேண்டும், ஆண் உறையை உபயோகிக்குமுன் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுதல்.

நரம்பு ஊசிகளைப் பயன்படுத்தாம லிருத்தல், போதைப் பொருள்களை உபயோகிக் காமலும் மது அருந்தாமலும் இருப்பது.

மருத்துவர் உபயோகிக்கும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் நன்கு சுத்திகரிக்க ப்பட்டவை தானா என்பதைத் தெரிந்து கொள்ளுதல். இதற்கு மாறாகச் செயல்ப டும் மருத்துவரை அணுகாதிருத்தல்.

HIV பற்றிய உண்மைகளைப் பரப்புவது எங்ஙனம்? 

HIV பற்றிய விபரங்களை முதலில் தெரிந்து கொண்டு நமது நண்பர்கள், சகோத ரர்கள், பெற்றோர், உறவினர் மற்றவர்களிடம் விளக்குதல்.
பள்ளி, கல்லுரி மாணவர்களிடம் இது பற்றிய செய்திகளை விளக்கக் கூறுதல். ஆபாயகரமான உடலுறவு இரத்தம் மூலம் பரவுவதை விளக்குதல், பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாக்கவும் உதவவும் வேண்டும்,

HIV பாதிக்கப்பட்டவர் இறந்து விடுவர் எனத்தெரிந்தும் ARV சிகிச்சை அளிக்க படுவதால் ஏற்படும் நன்மை யாவை?

ARV சிகிச்சை மூலம் பல நன்மைகள் ஏற்படும். நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தித்திறன் அதிகப்பட்டு அவர் குணமாக ஒரு வாய்ப்பு உண்டாகலாம்.

ஆபாய கரமான கட்டத்திலிருந்து, தொற்றுகளி லிருந்து காப்பாற்ற படலாம். T.B. போன் ற நோய்கள் அவரிடமிருந்து மற்றவர் களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

ஆவரது வாழ்நாள் அதிகரித்து அவரது குடும்பத்தைப் பாதுகாக்கலாம். அவர்க ள் அதிக சக்தியையும், நல்ல உடல் நிலையும் பெற்று நல்ல குடிமகனாக இருக் கலாம்.

அவர்கள் தன் மோசமான செயலால் (அதைச் சுட்டிக்காட்டி) மற்றவர் களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம். மற்றவர்களுக்கு விளக்கலாம்.


இரண்டாவதாக பல சமூக நலன்களும் உள்ளன- ARV தெரப்பியால் HIV, AIDSஜ ஒழிக்க அரசாங்கம் ஏற்படுத்தியது. இதன் மூலம் மருத்துவர், மருத்துவமனை, நர்சுகள் ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியும்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
நன்னடத்தை இல்லாதவர் களையே HIV தாக்கும் என்ற இழிவை அகற்ற. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உள்ளன என்பதால் அநே கர் HIV சோதனை மேற்கொள்கின்றனர்,

அவர்களின் பாதிப்புக் தன்மையை அறிந்து அதற்குத்தக்கவாறு தன் வாழ்வை மாற்றிக் கொள்கின்றனர். இதன் காரணமாக நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
Tags: