இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிய பணம் எவ்வளவு தெரியுமா?

0
பிரிட்டன், இந்தியாவி லிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டு விடும்.
பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் கால கட்டத்தில் 

பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும் தான். 


அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தை யும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். 

அவ்வாறு பிரிட்டன், இந்தியாவி லிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், 

அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டு விடும் என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக்.

இந்தியாவில் பிரிட்டனின் காலனி ஆதிக்கம் நிலவிய கால கட்டத்தில் காலனி இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் 

இடையே நிலவிய நிதி உறவுகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சியை மேற்கொண்டவர் இந்த உட்ஸா பட்நாயக்.

இந்தியாவி லிருந்து பிரிட்டன் வெளியேறி 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்ட போதிலும், 

காலனி ஆதிக்கத்தின் வடுக்கள் இன்னமும் அகன்று விடவில்லை. 

1858 லிருந்து 1947 -ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி நிலவியதாக வரலாறு கூறுகிறது என்றாலும், 

1765 முதல் 1938 வரையிலான கால கட்டத்தில் தான் அவர்களது ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. 

அந்த 173 ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களைச் சூறையாடி, அவர்கள் அள்ளிக் கொண்டு சென்ற 


செல்வத்தின் மதிப்பு ஏறக்குறைய 9.2 டிரில்லியன் பவுண்டுகள் (45 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்). 

இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ஏழாயிரத்து எழுநூறு லட்சம் கோடி ரூபாய்.

இந்தியாவி லிருந்து மேற்கொள்ளப்பட்ட உபரி ஏற்றுமதியை, இன்றைய மதிப்பில் 

5 சதவிகித வட்டி விகிதத்தோடு கணக்கிட்டால் வரும் இந்தப் பெருந்தொகை, 

தற்போதைய பிரிட்டனின் 2018-ம் ஆண்டு ஜிடிபி விகிதமான 3 டிரில்லியன் டாலரைவிட அதிகம். 
இந்தியாவி லிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், 

அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டு விடும்" என்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 

அண்மையில் தாக்கல் செய்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார் 

உட்ஸா பட்நாயக். இந்தக் கட்டுரை அந்தப் பல்கலைக் கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ளது.

இந்தியாவி லிருந்து தாராளமாகச் சுரண்டப்பட்ட பொருள்கள் மூலம், தங்கள் நாட்டின் 


தங்க இருப்பையும் அந்நியச் செலாவணியை யும் உயர்த்திக் கொண்டனர். 

இந்தியாவி லிருந்து உலகளாவிய ஏற்றுமதியாகக் கிடைத்த உபரி வருவாய் அனைத்தும் 

லண்டனில் இருந்த இந்தியாவுக் கான தலைமைச் செயலாளரது கணக்குக்குச் சென்றது. 

பின், அதிலிருந்து ஒரு குண்டு மணி தங்கமோ அல்லது நிதியோ இந்தியர் களுக்குத் திரும்பக் கொடுக்கப் படவே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார் உட்ஸா.

அயல் நாட்டு அந்நியச் செலாவணியை உயர்த்த உழைத்த மக்களுக்கு, அவர்களிட மிருந்து பிடுங்கப்பட்ட வரிப் பணத்திலிருந்தே சொற்பமான கூலி வழங்கப்பட்டது. 

மக்களிட மிருந்து பெறப்பட்ட வரிப் பணம் அனைத்தும் மக்களின் நலன்களுக் காகச் செலவிடப் படாமல் இறக்குமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. 

அபரிமிதமாக வகுக்கப்பட்ட பட்ஜெட், நாட்டின் வருவாய் மதிப்பைப் பாதித்தது. இது விவசாயி களின் வயிற்றைச் சுருக்கிக் காய வைத்தது. 

1946-ல் இந்தியா சந்தித்த தனிநபர் உணவு பற்றாக் குறையை, இன்றளவும் தெற்குப் பகுதிகளில் 

எந்த நாடும் சந்தித்த தில்லை என்றும் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட் டுள்ளார் உட்ஸா.

1900 முதல் 1945 - 46-ம் ஆண்டு வரை இந்தியாவின் தனிநபர் வருவாய், ஏறக்குறைய ஒரே சீராக இருந்தது. 

1900-02-ல் இந்தியரின் தனிநபர் வருவாய் 196.1 ரூபாயாக இருந்தது. 


அதுவே 1945-46-ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர், 201.9 ரூபாயாக இருந்தது. 

மேற்கூறிய கால கட்டங்களில் இந்தியரின் தனிநபர் வருவாய் அதிக பட்சமாக 223.80 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்தது 1930 -32-ம் ஆண்டுகளில் தான்.
இந்தியாவை ஆண்ட காலத்தில் பிரிட்டிஷார் ஒவ்வோர் ஆண்டும், மத்திய பட்ஜெட்டின் 26 முதல் 36 சதவிகிதத்துக்கு 

ஈடான செல்வத்தை இங்கிருந்து சுரண்டிக் கொண்டு சென்றனர். 

இதுதான், இந்தியாவை வளர்ந்த நாட்டை நோக்கிச் செல்ல விடாமல் மிகவும் பின் தங்க வைத்தது. 

இந்தியாவி லிருந்து வெளி நாட்டுக்குச் சுரண்டிக் கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் மட்டும் அப்படியே இங்கேயே இருந்திருந்தால், 

இந்தியா சுகாதாரத்திலும், சமூக நலன்களிலும் மிகவும் சிறந்து விளங்கி இருக்கும்.

தற்போது ஒரு நாட்டில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் எப்படிக் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதோ அப்படித் தான், 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பிற தொற்று நோய்கள் போன்ற வற்றால் மடிந்தனர். 


இதன் காரணமாக, 1911-ம் ஆண்டு வாக்கில் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 22 வயதாகவே இருந்தது.

இந்தியாவில் காலனி ஆதிக்கம் நிலவிய கால கட்டத்தில் பிரிட்டன், உணவு தானியங் களை 

அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்ததோடு, அதிகமான வரி விதிப்பையும் செய்தது. 

இதனால் இந்தியாவின் வாங்கும் திறன் குறைந்து பஞ்சம் நிலவியது. 

1900-ம் ஆண்டில் தனி நபரின் ஒரு நாளைய உணவுத் தேவை 200 கிராமாக இருந்த நிலையில், 

இரண்டாம் உலகப் போர் நடந்த 1946-ம் ஆண்டு கால கட்டத்தில், 137 கிராமாகச் சுருங்கியது. 

இது, ஒரு தனி மனிதனின் வாங்கும் திறனை கடுமையாகப் பாதித்தது. நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடி, 
தனிநபரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி, இந்திய மக்கள் மத்தில் ஊட்டச் சத்து குறைபாட்டை ஏற்படுத்தியது.

ஏறக்குறைய விடுதலை பெறப்போகும் காலகட்டத்தில் இந்தியா அப்போது இருந்த நிலையில், 


சமூகக் காரணிகளை மிக மோசமான நிலைக்குத் தள்ளி விட்டு இந்தியாவிடம் சுதந்திரத்தைக் 

கொடுத்து விட்டு வெளியேறினர் பிரிட்டிஷார்" என்று அதில் மேலும் தெரிவித்துள்ளார் உட்ஸா பட்நாயக்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings