சென்னையில் கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு !

0
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வறண்ட 


கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் பரிதவித்த நிலையில் காலையில் மீட்கப் பட்டுள்ளார்.

சரஸ்வதி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மூதாட்டி பஜனைக் கோயில் சாலையில் தனியாக வசித்து வந்தார். 

குழந்தைகள் இல்லாத நிலையில் அவரது கணவர் உயிரிழந்து விட்டதால் கடந்த சில ஆண்டுக ளாக அவர் தனியாக வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் வீட்டுக்கு அருகே இருந்த தரைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 

அதை யாரும் பார்க்காததால் அவருக்கு உடனடியாக உதவி கிடைக்க வில்லை.

ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு அவருக்கு உணவு கொண்டு வந்த பக்கத்து வீட்டினர், 

அவரைக் காணாமல் தேடியபோது கிணற்றில் விழுந்து கிடந்ததை பார்த்தனர். 

உடனடி யாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டனர். 


அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டிருந் தாலும், தைரியத்தோடு மனம் தளராமல் இருந்ததே அவர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் என்கிறார்கள்.

இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த மூதாட்டியின் தைரியத்தை அக்கம் பக்கத்தினர் பாராட்டு கின்றனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings