சுவரை உடைத்து கொண்டு பறந்த விமானம் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்கள் !

0
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவை தவிர துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப் பட்டு வருகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் விமானங் களை இயக்கி வருகிறது. 

இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று தினமும் அதிகாலை 1.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு செல்வது வழக்கம்.

துபாயில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு வந்த இந்த விமானம், வழக்கம் போல் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு மீண்டும் துபாய்க்கு புறப்பட தயாரானது.

துபாய் செல்வதற் காக வந்திருந்த பயணிகள் 130 பேரும் அதில் ஏறி அமர்ந்தனர். 

அதில் விமானிகள் (பைலட்) உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானிகள் கணேஷ் பாபு, அனுராக் ஆகியோர் விமானத்தை இயக்கினார்கள்.

ஓடு பாதையின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி நோக்கி ஊர்ந்து வந்த விமானம் தரையில் இருந்து எழும்பி பேரிரைச்ச லுடன் மேலே பறக்க முயன்றது. 

அப்போது விமானத்தின் பின்பக்க சக்கரங்கள் ஓடுபாதையின் கடைசி பகுதியில் இருந்த ஐ.எல்.எஸ். எனப்படும் 

ஆண்டெனா கருவிகள் மீது மோதி, அதன் அருகில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச் சுவரின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு பறந்தது.

விமானத்தின் சக்கரங்கள் இடித்ததால், சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த சுற்றுச் சுவரின் மேல் பகுதியில் 2 இடங்களில் தலா 5 அடி அகலத்திற்கு சுவர் இடிந்து விழுந்தது. 

5 ஆண்டானா கருவிகளும், ஒரு கண்காணிப்பு கருவியும் வளைந்து சேதம் அடைந்தன. 

இந்த சம்பவம் சரியாக அதிகாலை 1.19 மணிக்கு நடந்தது. ஆனாலும் விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி வானில் பறந்தது.

விமானத்தின் சக்கரங்கள் மோதியதில் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்ததை அருகில் உள்ள 

கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்தார். 

உடனே அவர் இதுபற்றி உயர் அதிகாரி களுக்கும், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் உள்பட அதிகாரிகள் குழுவினர் 

மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 

உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த விமானிக்கு விபத்து நடந்திருப்பது பற்றி தகவல் கொடுக்க முயன்றனர். 

ஆனால் அதற்குள் விமானம் திருச்சி வான் எல்லையை தாண்டி சென்று விட்டதால் 

பெங்களூரு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மூலம் விமானியை தொடர்பு கொள்வதற் கான ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் இறங்குதல், மற்றும் ஏறுவதற்கு வழி காட்டியாக 

இருக்கும் ஐ.எல்.எஸ். கருவிகள் விமானம் மோதியதில் சேதம் அடைந்து இருப்பது பற்றி 

விமான நிலைய ஆணைய குழும அதிகாரி களுக்கு தகவல் கொடுத்து விட்டு வி.ஓ.ஆர். என்ற மாற்று வழி மூலம் விமானங் களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்தனர். 

இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை.

சுற்றுச் சுவரை இடித்து தள்ளி விட்டு பறந்து சென்ற விமானம் எந்த வித சேதமும் இன்றி துபாய் வரை பறக்க முடியுமா? 

அதில் உள்ள ஊழியர்கள் உள்பட 136 பயணிகளும் துபாய் வரை பாதுகாப்பாக போய்ச் சேர முடியுமா? என்ற சந்தேகமும் அதிகாரி களுக்கு ஏற்பட்டது. 

விமானம் சுற்றுச்சுவர் மீது மோதிய போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. 

ஆனால் என்ன நடந்தது? எதனால் இந்த சத்தம்? என்று தெரியாமல் பயணிகள் உயிர்ப் பயம் மேலோங்க ஆபத்தான பயணத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே பிரச்சினைக்குரிய அந்த விமானம் மஸ்கட் நகர் எல்லைக்குள் சென்று விட்டது. 

அப்போது விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரை இறக்குமாறு விமானிக்கு கட்டளை பிறப்பித்தனர்.

இந்த கட்டளையை ஏற்று விமானிகள் விமானத்தை மும்பைக்கு திருப்பி ஓட்டி வந்து அங்குள்ள விமான நிலையத்தில் அதிகாலை 5.30 மணிக்கு தரை இறக்கினார். 

விமானம் பாதுகாப்பாக தரை இறங்கிய பின்னரே அதில் இருந்த 136 பயணிகளும், 

ஊழியர்களும் தாங்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

மும்பையில் விமானம் தரை இறங்கி விட்டது என்ற தகவல் உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர் அந்த பயணிகள் வேறொரு விமானம் மூலம் மும்பையில் இருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

திருச்சியில் சுற்றுசுவர், ஆண்டனா மீது மோதியதில் விமானத்தின் அடிபாகம் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. 

சுற்றுசுவரில் இருந்த கம்பி வலை விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இருந்தது. 

விமானம் மும்பையில் தரை இறங்கி பிறகு அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்திய பிறகு தான் இந்த சேத விவரம் தெரிய வந்தது.

இந்த சேதங்களை ஆய்வு செய்த மும்பை அதிகாரிகள் விமானம் பெரிய விபத்தில் இருந்து தப்பி உள்ளது என்று திருச்சி அதிகாரி களுக்கு தெரிவித்தனர்.

ஓடு பாதையில் இருந்து மேலே எழும்பி உயர பறக்கும் நேரத்தில் விமானம் சுற்றுச் சுவரை 

சேதப்படுத்தி விபத்து ஏற்படுத்தி யதற்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமா? 

அல்லது விமானியின் கவனக் குறைவினால் இந்த விபத்து நடந்ததா? என தெரிய வில்லை.

இந்த விபத்து பற்றிய தகவல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இடிந்த சுற்றுச்சுவர் பகுதியை சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ் சாலையில் 

வாகனங்களில் சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் விமானத்தின் சக்கரங்கள் மட்டுமே மோதியதால் விமானத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. 

விமானத்தின் உடல் பகுதி மோதி இருந்தால் விமானம் மேற்கொண்டு பறக்க முடியாமல் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். 

அத்துடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். 
ஆனால் அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.

விபத்து நடந்த பகுதியை நேற்று காலை திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் 

ப.குமார் எம்.பி, திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஆகியோர் பார்வை யிட்டனர்.

பின்னர் குணசேகரன் நிருபர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விபத்துக் குள்ளான விமானம் போயிங்-737 ரகத்தை சேர்ந்தது ஆகும். அந்த விமானத்தில் 130 பயணிகள், 6 ஊழியர்கள் என மொத்தம் 136 பேர் இருந்தனர். 

இந்த விமானம் ஓடு பாதையில் இருந்து எழும்பி வானில் பறந்து செல்ல முயன்ற போது தான் விபத்தில் சிக்கி இருக்கிறது. 

ஓடு பாதையில் குறிப்பிட்ட தூரம் வந்ததும் விமானம் மேலே பறக்க தயாராகி விடும். 

இந்த குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி விமானம் பறக்க முயன்றதால் தான் சுற்றுச் சுவரில் சக்கரங்கள் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

அதிகாரிகள் குழு விசாரணை

விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? என்பது பற்றி டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 

இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்தின் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தும். 

அந்த குழுவின் முழு விசாரணைக்கு பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும். 

இந்த விபத்தினால் விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் இயக்கத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சேதம் அடைந்த ஐ.எல்.எஸ். கருவிகளை சீரமைக்கும் பணி முடிவடைய 20 நாட்கள் ஆகும். 

இதற்கான தொழில் நுட்ப வல்லுனர் குழுவினர் சென்னையில் இருந்து வருகிறார்கள். 

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற விமானத்தை மஸ்கட்டில் தரை இறங்க அனுமதிக்க வில்லை என்பது தவறான தகவல் ஆகும்.

விமானத்தின் சக்கரம் மற்றும் டயர்கள் சேதம் அடைந்து இருந்ததால் வெளி நாட்டில் அதனை தரை இறக்கும்போது பல சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் 

என்பதால் தான் துபாயில் தரை இறங்குவதற்கு சுமார் 30 நிமிட நேரத்திற்கு முன்பாக மும்பையில் தரை இறங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி சுரேஷ் பிரபு

விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பதிவில், திருச்சி விமான நிலையத்தில் 

விபத்து நடந்த இடத்துக்கு விமான போக்கு வரத்து இயக்குனரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்திய தாகவும், 

விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்றை ஏர் இந்தியா அமைத்து இருப்பதா கவும் தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருவதால் விமானிகள் கணேஷ் பாபு, அனுராக் ஆகிய 

இருவரும் பணி ஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது. 

அதாவது அவர்களுக்கு பணி ஒதுக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது என தெரியாமல் தவித்த பயணிகள்

விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி தொடர்ந்து வானில் பறந்தது. 

விமானம் ஏற்படுத்திய விபத்து, ஐ.எல்.எஸ். ஆண்டனா கருவிகள் மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது பற்றி விமானிக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 

விமானிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது போதிலும் அவர் விமானத்தை துபாயில் தரை இறக்குவதிலேயே குறியாக இருந்து உள்ளார்.

விபத்து பற்றி விமானத்தில் பயணித்த 130 பயணிகளு க்கும் தெரிய வாய்ப்பு இல்லை என 

அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டாலும் பயணிகள் விமானம் புறப்பட்ட நேரமான அதிகாலை 1.15 மணியில் இருந்து 

விமானம் மும்பையில் தரை இறங்கிய நேரமான அதிகாலை 5.30 மணி வரை அதாவது 4¼ மணி நேரம் என்ன நடக்கிறது என தெரியாமல் ஒரு தவிப்புடனே இருந்து உள்ளனர்.

விமானம் தாழ்வாக பறந்தது ஏன்?

திருச்சியில் விபத்தை ஏற்படுத்திய விமானத்தை ஓட்டியவர் கணேஷ் பாபு என்ற விமானி ஆவார். 

மும்பையில் இவர் விமானத்தை தரை இறக்கியதும் விமான நிலையங் களின் ஆணைய குழு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்றனர். 

ஓடு பாதையில் நிர்ணயிக்கப் பட்ட இடத்தை தாண்டியும் விமானத்தை தாழ்வாக பறக்கும்படி இயக்கியது ஏன்? என்று கேள்வி கேட்டு விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருச்சிக்கு அழைத்து வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

விமானத்தின் சக்கரத்தில் சிக்கிய கம்பி வலை


திருச்சி விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்திய விமானம் மும்பையில் தரை இறக்கப்பட்ட 

பின்னர் தான் அதன் அடிப்பகுதியி லும் பலத்த சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. 

மேலும் விமானத்தின் சக்கரங்கள் சுற்றுச்சுவரில் மோதிய போது அதன் மேல் பகுதியில் இருந்து கம்பி வலையின் ஒரு பகுதி தேசிய நெடுஞ் சாலையில் விழுந்து உள்ளது. 

இன்னொரு பகுதி சக்கரத்தில் சிக்கி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)