கதவை திறந்து வைத்து உறங்கியதால் அரங்கேற்றிய காரியம்? அதிர்ச்சியில் தம்பதியினர் !

0
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 22 வயது இளைஞரு க்கு கடலூர் மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் அபோன்ராஜ் மகன் மணிகண்டன். 


இவர், கடந்த 4-8-2016 அன்று அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டின் உள்ளே புகுந்துள்ளார்

வீட்டில் தம்பதியினர் அவர்களின் இரண்டு குழந்தைகள் படுத்திருந்தனர். 

அப்போது மின்சாரம் தடை பட்டிருந்ததால் காற்றுக்காக கதவினை திறந்து வைத்து படுத்திருந்த நிலையில் மணிகண்டன் அதனை பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்துள்ளார்.

அங்கு, 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இதில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தம்பதியினர் விழித்துக் கொண்டு மணி கண்டனை பிடித்துக் கொண்டனர்.

ஆனால், அவர் இருவரையும் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இது குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி. லிங்கேஸ்வரன் முன்னிலை யில் நடைபெற்று வந்தது. 

நீதிபதி இந்த விவகாரத்தில் தற்போது தீர்ப்பு வழங்கி யுள்ளார்.


வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 3 ஆண்டுகளும், சிறுமியை கடுமையான பாலியல் தாக்குதலுக்கு 

உட்படுத்தி யதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்புக் கூறினார்.

மேலும், மொத்தம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அபராதத் தொகையை பாதிக் கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தர விட்டார். 

இதனை யடுத்து, மணிகண்டன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings