விராலி மலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார் விபத்தில் பலி !

0
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தாலுகா ஆவூர் அருகே உள்ள வில்லாரோடை கிராமத்தை ஒட்டி யுள்ள கோரை யாற்றில் 
நேற்று இரவு சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக விராலி மலை தாசில்தார் பார்த்திபனுக்கு தகவல் சென்றது. 

இதைத் தொடர்ந்து வருவாய் துறை அலுவலர் களை அழைத்துக் கொண்டு வாகனத்தில் விராலி மலையில் இருந்து 


கீரனூர் சாலையில் இன்று (29ம் தேதி) அதிகாலை இரண்டு மணியளவில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பூமரம் குளவாய்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே சென்றபோது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்ததில் 

கட்டுப் பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளிய மரத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே தாசில்தார் பார்த்திபன் உயிரிழந்தார். 

டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவ மனைக்கு விராலி மலை போலிசார் அனுப்பி வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings