நாகை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு !

0
நாகை அருகே, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த, 2 வயது சிறுமியை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். 
நாகை மாவட்டம், புதுப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திகேயன்; விவசாயி. இவரது, 2 வயது மகள் திவ்யதர்ஷினி, 

நேற்று பிற்பகல், 2:45 மணியளவில், வீட்டின் பின்பக்கம் தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது, அப்பகுதியில் தோண்டப் பட்டிருந்த, 18 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தலைஞாயிறு மற்றும் 


வேளாங்கண்ணி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, முதல் கட்டமாக, ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுமிக்கு, 

சுவாசிப்பதற் காக ஆக்சிஜன் காற்றை, சிறிய குழாய் மூலம் செலுத்தினர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம், ஆழ்துளை குழாய் அருகே பள்ளம் தோண்டி, மாலை, 4.00 மணியளவில், சிறுமியை உயிருடன் மீட்டனர். 

சிறுமிக்கு, மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings