தன மகள் கற்சிலையாக போகிறாள் - பெற்றோரின் செயலால் பரபரப்பு !

0
ஜோதிடப்படி பள்ளி சிறுமி கற்சிலையாக மாறப்போகிறார் என்ற நம்பிக்கை யில், 
அவரை கோவில் வளாகத்தில் பெற்றோர் உட்கார வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

புதுக்கோட்டை, மணமேல்குடி அருகே அம்மா பட்டிணத்தை சேர்ந்த பழனி - லட்சுமி தம்பதியின் மகள் மாசிலா, 12. 

இவர், மூவனுாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கிறார். 

கடவுள் பக்தி காரணமாக, விரைவில் துறவியாக மாறப் போவதாக கூறி வந்துள்ளார். 

இதை யடுத்து, அவரது ஜாதகத்தை, பெற்றோர் பார்த்துள்ளனர். 

இதில், மாசிலாவுக்கு, 12 வயதாகும் போது, கடவுள் பக்தி காரணமாக, கற்சிலையாகி விடுவார் என ஜோசியர் கூறியுள்ளார். 

இதை நம்பிய பெற்றோர், மாசிலாவுக்கு நேற்று முன்தினம், 12வது பிறந்த நாளை கொண்டாடி யுள்ளனர். 


பின், வீட்டில் சிறப்பு பூஜை செய்து, மாலை மாசிலாவு க்கு பட்டுச்சேலை கட்டி, தலையில் பூ வைத்து, 

மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவில் வளாகத்துக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். 

'உயிருடன் இருக்கும் சிறுமி, கற்சிலை யாக போகிறார்' என்ற தகவல் ஊருக்குள் பரவிய தால், அதை வேடிக்கை பார்க்க பலர் கோவில் முன் மக்கள் திரண்டனர். 

பரவசத்தில் பெண்களில் சிலர், பக்தி கோஷ மிட்டனர். 

நீண்டநேரம் காத்திருந்த பின்பும், மாசிலா உடலில் எந்த மாற்றமும் ஏற்படாத தால், பெற்றோர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். 

அங்கு திரண்டிருந்த வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings