விவசாயியை கொன்றதால் முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் !

0
இந்தோனேசியா வில் முதலை, விவசாயியை கொன்றதால் ஆவேசமடைந்த கிராமத்தினர் 300 முதலைகளை கொன்று குவித்தனர். 
விவசாயியை கொன்றதால் முதலைகளை கொன்று பழி தீர்த்த கிராமத்தினர் !
இந்தோனேசியா வின் பப்புவா மாகாணத்தில் முதலைப் பண்ணை ஒன்று உள்ளது. 

குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப் பட்டுள்ளதால், அவ்வப் பொழுது கிராம வாசிகள் முதலை களால் அடிக்கடி தாக்கப்பட்டு வருகின்றனர். 

விவசாயி ஒருவர் தனது பசுவிற்காக முதலை பண்ணை அருகே புல் அறுக்க சென்றார். அப்போது மறைந்திருந்த முதலை அவரை அடித்துக் கொன்றது.

ஏற்கனவே பலரை இது போல் பறி கொடுத்த கிராமத்தினர் ஆவேசமடைந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினர். 

ஆயினும் ஆவேசம் குறையாத கிராமத்தினர் வீடுகளிலிருந்த கத்தி, அரிவாள், மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் 
முதலை பண்ணைக்கு சென்று அங்கிருந்து முதலைகளை வெட்டி கொன்று தங்களது ஆவேசத்தை தீர்த்து கொண்டனர். 

இதில் 295 முதலைகள் இறந்தன. இச்செயல் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings