டெல்லி சரக்கு வேன் மீது விமானம் மோதியதில் பரபரப்பு !

0
துபாயில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று இரவு 8 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய த்தை வந்தடைந்தது. 
அதில் 133 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமான நிலையத்தில் சரக்கு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. 

அப்போது வந்திறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை ஒன்று அங்கிருந்த சரக்கு வேன் மீது திடீரென மோதியது. 

இதனால் விமானம் குலுங்கியதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக, விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், விமானத்தின் இறக்கை சரக்கு வேன் மீது மோதியதில் 

அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. அனைவரும் பத்திரமாக தரை யிறங்கினர் என தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings