பெற்ற குழந்தையை விமான கழிவறையில் வீசிவிட்டு சென்ற வீராங்கனை !

0
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. 
அந்த விமானம் தரை யிறங்கும் நேரத்தில் விமான ஊழியர்கள் கழிவறையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பிறந்து சில மணி நேரமான குழந்தை ஒன்று கிடந்தது. வளர்ச்சி முழுமை அடையாத நிலையில் அந்த சிசு இறந்து இருந்தது.

பெண் பயணி ஒருவர் கழிவறை யில் சிசுவை பெற்றெடுத்து வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. 

விமானம் தரை யிறங்கியதும் பயணிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப் பட்டது.

இதனால் பெண் பயணிகள் விமானத்துக் குள்ளே வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது விமானத்தில் பயணம் செய்த 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை, தான் சிசுவை பெற்றெடுத்து கழிவறையில் வீசியதாக கூறினார். 


இதை யடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது 

விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை பெற்று சிசுவை வீசியதை ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக இன்னும் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏர் ஆசியா விமான நிர்வாகம் தரப்பில் கூறும் போது, “விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். 

இதனால் ஏற்பட்ட இடையூறு களுக்கு பயணி களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கர்ப்பம் அடைந்த 19 வயது பெண் அதை மறைப்பதற்காக சிசுவை வெளியே எடுத்து கழிவறையில் வீசி விட்டு தப்ப முடிவு செய்து இருப்பது தெரிய வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings