கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரை அடைய சிறுமி !

0
அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி கற்பழிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், 

காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப் பட்டனர். 

அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது விசாரணை யில் தெரிந்தது.

கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை வக்கீல்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் நடந்தது. 

இதை தொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். 


அவர்களை வருகிற 31-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டு இருந்தார்.

இந்தநிலை யில் புழல் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இன்று நடந்தது.

இதற்காக எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ் திரேட்டுகள் கலைபொன்னி, ரோகித் ஆகியோர் வந்து இருந்தனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வரவழைக்கப் பட்டு இருந்தார்கள்.

கற்பழிப்பு குற்றவாளி களுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப் பட்டனர். 

அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings