பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் !

0
பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்ப தாக தொலைபேசி மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். 
வெடிகுண்டு மிரட்டலை யடுத்து பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை காவல் கட்டுப் பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன்,

“பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான். 

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப் பட்டது.

அவரது உத்தரவின் பேரில் துணை காவல் கண் காணிப்பாளர் மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். 


அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம்

 என்ற சந்தேகம் ஏற்பட்ட தால் போலீசார் ரயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். 

இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் இன்று பரபரப்பு காணப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)