குழந்தைகளை கொன்று தானும் உயிரை விட்ட கொடூரத் தந்தை !

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார் பட்டியை சேர்ந்த அந்தோணி கூலி வேலை செய்து வருகிறார்.
குழந்தைகளை கொன்று தானும் உயிரை விட்ட கொடூரத் தந்தை !
இவர் மனைவி முனீஸ்வரி பட்டாசு ஆலையில் பணிபுரிபவர். இவர்கள் 9 வயதில் மகள் முத்து லட்சுமி மற்றும் 4 வயதில் மகன் முனீஸ்வர னுடன் வசித்து வந்தனர்.

முனீஸ்வரி

கணவன் மனைவி இருவருக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்திருக் கிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை யில் அந்தோணி தனது மனைவி, மகன், மகள் மூவரையும் அரிவாளால் கொடூரமாக வெட்டி யிருக்கிறார். 
சம்பவ இடத்திலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்து விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த ஊர் மக்கள், 

படுகாயத் துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முனீஸ்வரியை சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். தற்போது அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் அருகே

இது தொடர்பாக வெம்பக் கோட்டை போலீஸ் விசாரணை செய்து, அருகிலுள்ள சவுக்கு ஓடை கம்மாய் அருகே அந்தோனியை பிடிக்கச் சென்ற போது, 

பிள்ளை களையும் மனைவி யையும் வெட்டிய அரிவாளால் காவலர்கள் முன்பே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் அந்தோணி. 
இன்று காலை நடந்த இச்சம்பவம் விருதுநகர் மாவட்ட த்தையே அதிர வைத்துள்ளது. 

எதற்காகத் தனது மனைவி பிள்ளை களை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என்பதைக் காவல் துறை விசாரித்து வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings