மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் பலி !

திருவாரூர் அருகே வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உயிரி ழந்தனர். 
மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் பலி !
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செந்தில் என்பவரது வீட்டின் மாடியில் அவரது 13 வயது மகன் பிரதீப், 9 வயது மகள் ஸ்ரீதேவி, வீட்டின் அருகே உள்ள 9 வயது சிறுவன் முகமது ஆகியோர் விளையாடிக் கொண்டிருந் துள்ளனர்.

அப்போது மாடியின் அருகே சென்ற மின்சார கம்பியை பிரதீப் எதிர்பாராத விதமாக பிடித்துள்ளார். இதில் பிரதீப், அருகில் இருந்த முகமது, ஸ்ரீதேவி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந் துள்ளது. 

அப்போது அருகில் இருந்த பிரதீப்பின் தாய் மீரா, அதிர்ச்சிடைந்து அவர்களை மீட்க முயன் றுள்ளார். இதில், 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

சிறுவன் முகமது சம்பவ இடத்தி லேயே உயிரிழக்க, சிறுவன் பிரதீப், மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். 
உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி யில் ஸ்ரீதேவி அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. காயமடைந்த மீரா, குடவாசல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குடவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings