வாகனம் மீது ரயில் மோதி 13 குழந்தைகள் பலி !

உத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பரிதாப மாக உயிரிழந்தனர்.
வாகனம் மீது ரயில் மோதி 13 குழந்தைகள் பலி !
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்ட த்தில் இன்று காலை பள்ளி மாணவர் களை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டி ருந்தது.

மேலும், அந்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது, அந்த வழித் தடத்தில் வந்த ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. 

இந்த விபத்தில் பள்ளி வாகன த்தில் இருந்த 13 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 
பலரின் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings