தடையை மீறி நடந்த சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் !

0
சசிகலா புஷ்பா எம்.பி., ராமசாமியின் திருமணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தி ருந்த நிலையில் அதை மீறி அவர்கள் திருமணம் இன்று நடந்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என தெரிகிறது.
தடையை மீறி நடந்த சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் !
மதுரை கீரைத்துறை மாகாளிப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமிக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

ராமசாமிக்கு ஏற்கெனவே திருமணமாகி கவிதா என்கிற மனைவி இருந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவசர அவசரமாக சத்யப் பிரியாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

பின்னர் சில மாதங்களே வாழ்ந்த ராமசாமி, சத்யப்பிரியா கர்ப்ப மானவுடன் அவரை தாய் வீட்டுக்கு அனுப்பியவர் பின்னர் வந்து பார்க்கவே இல்லை. 

குழந்தை பிறந்த பின்னரும் அவர் சத்யப் பிரியாவை சேர்த்துக் கொள்ள வில்லை. 

இதை யடுத்து 2017-ல் சத்யப்பிரியா ராமசாமி மீது திருப்பரங் குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
நீதிமன்ற த்திலும் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்டிருந்த நிலையில் 

மாநிலங் களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை ராமசாமி மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. 

கணவரை தொடர் புகொள்ள முயன்ற சத்தியப் பிரியா அது முடியாத தால் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவரா விடமும் புகார் அளித்தார்.

இந்நிலை யில் சசிகலா புஷ்பா மற்றும் ராமசாமி திருமணம் குறித்து விளம்பரம் மற்றும் செய்தித் தாள்களில் வந்த பதிவினை 

சாட்சியாக கொண்டு மதுரை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி வெங்கடராமனி டம் சத்யப்பிரியா முறை யிட்டார்.
திருமண த்திற்கு தடை போட்ட நீதிமன்றம், ஏற்கெனவே திருமணம் ஆன மனைவி யுடனான விவாகரத்து வழக்கு நிலுவை யில் இருக்கும் நிலையில் இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தது. 

மேலும் ராமசாமி சசிகலா புஷ்பா மட்டு மல்லாமல் எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்யக் கூடாது என்று தடை விதித்தது.

ஆனால் சசிகலா புஷ்பாவும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகா வில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலை யான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று விட்டனர்.

இதை யடுத்து சசிகலா புஷ்பாவு க்கும் ராமசாமி க்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பது கேள்விக் குறியாக இருந்தது. 

ஆனால் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாமல் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் இன்று சசிகலா புஷ்பாவும், ராமசாமியும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் திருமண வீடியோ காட்சிகள் வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறியும், மனைவி சத்யப்ரியா விடம் விவாகரத்து பெறாமலும் ராமசாமி சச்சிகலா புஷ்பாவை மணந்தது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings