திருமணம் செய்யாமல் ஏமாற்றிய எம்.பி. மகன் மீது வழக்கு !

0
ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா மகன் நாசர் அலி மீது காரைக்குடி போலீஸார் 4 வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமணம் செய்யாமல் ஏமாற்றிய எம்.பி. மகன் மீது வழக்கு !
சென்னை மடிப்பாக்க த்தைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (33). வானொலி தொகுப்பா ளரான இவருக்கும், அன்வர் ராஜா எம்பியின் மகன் நாசர் அலிக்கும் நட்பு இருந்து வந்ததாக தெரிகிறது. 

இதில், திருமணம் செய்வதாகக் கூறி 3 ஆண்டு சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது காரைக் குடியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் என 

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி, சிவகங்கை மாவட்ட எஸ்பி, காரைக்குடி டிஎஸ்பி ஆகியோரிடம் சில நாட்களு க்கு முன்பு ரொபினா புகார் அளித்தார்.

இந்நிலை யில், நாசர் அலி, காரைக்குடி அருகே அரியக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது திருமண த்தை தடுத்து நிறுத்தக் கோரியும் ரொபினா போராட்டம் நடத்தினார். எனினும் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலை யில், ரொபினா அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார், நாசர் அலி மீது ‘திருமணம் செய்து கொள்வதாக கூறி 

ஏமாற்றி விட்டு ரூ.50 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும், பணத்தை திரும்பக் கேட்ட போது ரொபினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், பெண் என்றும் பாராமல் கொடுமை செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் 417, 420, 506(1) மற்றும் பெண்கள் வன் கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதியப் பட்டுள்ளது. 

காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)