போலி சிம்கார்டுகளை இப்படித்தான் - செல்போன் நிறுவனங்கள்?

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாக கூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம்கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், 
போலி சிம்கார்டுகளை இப்படித்தான் - செல்போன் நிறுவனங்கள்?

சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, 
இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கி லடங்கா சிம் கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன.

ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்று குமுற லுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவா யிற்று என்றே தெரியவில்லை.

கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, “எனக்கே தெரியாமல் என் பெயரில் பல சிம்கார்டுகள் உலவு கின்றன ” என்று கோவை மாநகர காவல் நிலையத் திலும், 

மத்திய தொலைத் தொடர்புத் துறையிலும் புகார் அளித்தார். இதுவும் கிருஷ்ணன் கொடுத்த புகார் போலவே அமுங்கிப் போய்க் கிடக்கிறது.
ஒரு வழியாக தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாக நந்தினியின் ஆவணங் களை வைத்து 4 போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதை 

உறுதிப்படுத்திய மத்திய தொலைத் தொடர்புத்துறை, அவரது பெயரில் பெறப்பட் டுள்ள எண்கள் குறித்த பட்டிய லையும் கடிதம் மூலம் தெரிவித் துள்ளது. 
போலி சிம்கார்டுகளை இப்படித்தான் - செல்போன் நிறுவனங்கள்?

கூடுதல் நடவடிக்கை தேவை என்றால், உள்ளூர் காவல் துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும், 

தொலைத் தொடர்புத் துறை தெரிவி க்கவே, நாக நந்தினி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நாடு முழுவது முள்ள பல லட்சக்கணக் கான போலி சிம்கார்டுகள் குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் ஆவணங் களைச் சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்க தொலைத் தொடர்பு துறையினர் மறுக்கின்றனர். 

தமிழகத்தில் உள்ள தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவன த்தின் மூலம் மட்டும் 15 லட்சம் பேரின் ஆவணங் களைப் பயன்படுத்தி, 42 லட்சம் நபர்களுக் கான சிம் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட் டுள்ளன. 

கோவையில் மட்டுமே 3 லட்சம் போலி சிம் கார்டுகள் உள்ளன. இந்த போலி சிம் கார்டுகளை கொண்டு, பல்வேறு விதமான குற்றச் செயல்கள் அரங்கேறு கின்றன.
மோடி தமிழின் பெருமையை பேசுவது ஏன்?
கோவை யில் பீளமேடு, பிஆர்பி காலனி பகுதியில் சிலரது ஆவணங் களை வைத்து நான்கே நாட்களில் 580 சிம் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட் டுள்ளன. 
இதில் பல முக்கிய அரசு அதிகாரிகளது ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயம். சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், 

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் காட்டவும் தொலைத் தொடர்பு நிறுவனங்களே போலிகளை ஊக்குவிக்கின்றன என்பது பாதிக்கப் பட்டவர்களின் வேதனை முறையீடு.

இது குறித்து தொலைத் தொடர்புத்துறையில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 
போலி சிம்கார்டுகளை இப்படித்தான் - செல்போன் நிறுவனங்கள்?

ஒரு நிறுவனம் தனது சிம் கார்டுகளை ஏராளமான வாடிக்கை யாளர்கள் பயன்படுத்து கிறார்கள் என்பதை வைத்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கூட ஏலமே இல்லாமல் பெற முடியும் என்று அன்றே, கோவை கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

‘போலி சிம் கார்டுகள் எப்படி உருவாக்கப் படுகின்றன. யார் யார் அதில் அதிகமாக ஈடுபடு கின்றனர்?’ என கேள்வி யுடன் சிலரைத் தேடினேன்.
தக்காளி ஆலிவ் சாலட் செய்வது !
சிம் வாங்கிக் குங்க சார்’ என்று கூவிக் கூவி அழைத்தபடி சாலையோரக் குடைகளின் கீழ் கடை விரித்திருக்கும் நபர்களிடம் இது தொடர்பாகப் பேசியதில்,

பல இடங்களில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடங்களே உள்ளன. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் ஒரே நேரத்தில் 50 முகவரிகள் வரை உரிய போட்டோ ஆதாரங் களுடன் கைக்கு வந்து விடும். 

அதை ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு விற்று விடுவோம். 3 மாதம் வரை அதை எங்கள் பொறுப்பில் வைத்திருந்து, அதன் பின்னர் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றி விற்பது என்றும் செய்வோம். 

தொலைத் தொடர்பு டிபார்ட் மென்ட்டிலேயே அப்படி பலர் எங்களின் நட்புறவில் (?!) உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு அதிலிருந்து பெயர், முகவரி, தேர்தல் ஆணைய அட்டையின் ஜெராக்ஸ் போன்ற வற்றைக் காட்டி, தனி சிம்கார்டு ரெடி செய்து விடுவோம். 

எங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு சிம்கார்டு விற்பனை செய்யணும் என்கிற நெருக்கடி இருப்பதால், ஆர்.டி.ஓ. ஆபீஸ், ரேசன் கடைகள், ஆதார் உள்ளிட்ட முகாம்கள் நடத்தும் 
சிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தவர்களுக்கு சிறை தண்டனை !
இடங் களைத் தேர்வு செய்து அங்கேயும் போய் விடுவோம். அங்கே குப்பைக்குப் போன விண்ணப்பங்களைக் கொஞ்சம் திருத்தங்கள் செய்து உயிர் கொடுத்து விடுவோம்.

அந்த சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நாங்கள் பெரிதாய் ஒன்றும் செய்து விட முடியாது. எங்களுக்கு சிம்-கார்டு விற்பனையை அதிகப் படுத்தும் ஒரு டார்கெட் மட்டும் தான். என்கின்றனர்.

போலியான முகவரி களில் பெறப்பட்டு இந்த வழியில் சுற்றும் சிம்-கார்டுகளை, கல்லூரி மாணவர்கள், 
போலி சிம்கார்டுகளை இப்படித்தான் - செல்போன் நிறுவனங்கள்?

கள்ளக் காதல் ஜோடிகள் தான் அதிகளவில் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குக் கிடைத்த இன்னொரு அதிர்ச்சித் தகவல்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு சிம் கார்டு அல்லது டெலிபோன் இணைப்பு வாங்க வேண்டு மென்றால் அது மிகவும் சிரமமானது. 

தீவிரவாதிகள் கைகளில் அது போய் விட்டால் தவறாகப் பயன் படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பயப்படு கிறார்கள். 

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் தவறில்லை !
இங்கேயோ, சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப் படுகின்றன. அலைந்து கொண்டிருக்கத் தேவை யில்லை. பெட்டிக் கடைகளி லும் கிடைக் கிறது சிம் கார்டு. 

சாலை களில் குடைகள் அமைத்து, எக்ஸிகி யூட்டிவ்கள் பிளாட் பாரத்தின் ஓரமாக உட்கார்ந்து கொண்டு, 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை இலவச டாக் வேல்யூவுடன், சிம் விநியோகம் செய்து கொண்டி ருப்பார்கள்.

திருச்சி மத்திய சிறையில், நவம்பர் 2009-ல் 5 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், கஞ்சா பொட்ட லங்கள் கைப்பற்றப் பட்டன. 

செல்போன் பயன் படுத்தி சிக்கிய கைதிகளிடம் தனியாக விசாரணை நடத்தப் பட்டது. செல்போன் பதுக்கி வைத்த இடத்தை அவர்கள் தெரிவித்தனர். 

அந்த இடங்களில் தோண்டிய போது கார்பன் காகிதம் சுற்றப் பட்ட பொட்ட லங்கள் சிக்கின. அவற்றை பிரித்த போது அதில் செல்போன்கள் இருந்தன. சோதனை யில் 6 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், 7 பேட்டரிகள் சிக்கின.
ப்ளெயின் நெய் சாதம் செய்வது !
கார்பன் காகிதத்தை மேலே சுற்றி செல்போன், சிம் கார்டுகளை மண்ணு க்குள் புதைத்து வைத்தால் செல்போன் டிடெக்டர் கருவியாலோ, மோப்ப நாய் மூலமோ 

அங்கே செல்போன் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியாது என்ற தொழில் நுட்பத்தை (?!) திருச்சி மத்திய சிறையில் நடந்த செல்போன் ரெய்டு மூலமாகத் தான் போலீசாரே தெரிந்து கொண்டனர். 

இந்த ரெய்டு முடிந்து ஏழாண்டுகள் (2009) கடந்து விட்டன. சிறை வாசிகள், சிறைக் குள்ளே இருந்த படியே இவ்வளவு விபரமாக அப்போதே இருந்தனர். 

இப்போது இன்னும் நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும். ‘டெலிகாம் ரெகுலாரிட்டி அத்தாரிட்டி ஆஃப் இண்டியா (ட்ராய்) தன் பங்குக்கு அவ்வப் போது, “சிம்- கார்டு கொடுப்பதில் 
போலி சிம்கார்டுகளை இப்படித்தான் - செல்போன் நிறுவனங்கள்?

இன்னின்ன ஒழுங்கு முறை களைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று பெரிதாய் கொடுக்கும் சுற்றறிக்கையை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வ தில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மாணவர்கள், கள்ளக் காதலர் களோடு மட்டும் இந்த போலி சிம் கார்டுகள் சுற்ற வில்லை. 
ஸ்கூல் கிளாஸ் ரூமில் டீச்சரும், வாத்தியாரும் !
தமிழகத்தின் சிறைகள் தொடங்கி வடக்கில் திகார் சிறைச்சாலை வரையிலும், அதையும் தாண்டி, தீவிரவாத த்தின் பிடியிலும் சுற்றிக் கொண்டுதான் இருக்கி ன்றன.

ட்ராய், சிறைத்துறை, செல்போன் நிறுவனங்கள் மூன்றையும் ஒன்றிணைத்து அரசுகள் வேகமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.
Tags:
Privacy and cookie settings