ஹால் டிக்கெட்டை கிழித்து, காதலிக்க வற்புறுத்தல் !

0
பிளஸ் டூ மாணவி காதலிக்க வற்புறுத்தப் பட்டதால், தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அருகே தேவீரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி. 
ஹால் டிக்கெட்டை கிழித்து, காதலிக்க வற்புறுத்தல் !
இவர் அகரம் அரசுப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவரது வகுப்பில் உள்ள சக மாணவன் பசுபதி. இவர் தமிழரசியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 

இதனால் அவருக்கு பலமுறை தொல்லை கொடுத் துள்ளார். பொதுத் தேர்வை ஒட்டி, நேற்று சிறப்பு வகுப்பிற்காக தமிழரசி பள்ளிக்கு சென்றுள்ளார். 

அங்கு தன்னை காதலிக்குமாறு பசுபதி வற்புறுத்தி யுள்ளார். மேலும் தன்னுடைய நண்பர் களுடன் சேர்ந்து கொண்டு, தமிழரசியின் ஹால் டிக்கெட்டை கிழித்துப் போட்டுள்ளார். 

இதனால் மனமுடைந்த மாணவி தமிழரசி, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை யடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. 
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலை யில் மாணவியின் தற்கொலைக்கு காரண மானவர்களை கைது செய்த பின்னரே, உடலைப் பெறுவோம் என்று உறவினர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings