தமிழகத்தில் 3 நாட்கள் மழை | 3 days in Tamil Nadu !

0
தமிழகத் தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் தெரிவித் துள்ளார்.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் அளித்த பேட்டியில் கூறிய தாவது 

‘காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. 

இது லட்சத்தீவை நோக்கி நகர வாய்ப் புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும். 

தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக் கூடும்.

அதிக பட்சமாக பாபநாசத்தில் 4 செ.மீ., தொண்டியில் 2 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. 

தென் தமிழகம், குமரி, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

கடலில் காற்றின் வேகம் 45 கீ.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும்.என்று அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings