சென்னையில் இரண்டாக பிரிந்த மின்சார ரயில் !

0
சென்னை அருகே இரண்டாக மின்சார ரயில் பெட்டிகள் பிரிந்து விட்டதால் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப் பட்டது. 

சென்னையில் இரண்டாக பிரிந்த மின்சார ரயில் !
சென்னை அருகே ஊரப்பாக்க த்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது. மின்சார ரயில் ஒன்றின் பெட்டிகள் இணைப்பு திடீரென பிரிந்து விட்டன. 

இதனால், ரயில் இரண்டாக பிரிந்தது. உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப் பட்டது. 

இதன் பிறகு, ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடை பெற்றது. 

இதனால், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மார்க்கத்தில் ஒரு மணி நேரத்தி ற்கும் அதிகமாக ரயில் சேவை பாதிக்கப் பட்டது. 
இதனால் மதிய நேரத்தில் இந்த மார்கத்தில் பயணித்த மின்சார ரயில் பயணிகள் பாதிக்கப் பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வரு கிறார்கள். 

ஓடிக் கொண்டிருந்த போதே ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பயணி களிடையே பீதியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings