நகம் பெயர்ந்தால் என்ன செய்வது தெரியுமா?

0
விரல்களு க்கு அழகு சேர்ப்பது நகம். அது பெயர்ந் தாலோ, அடி பட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; 


வார்த்தை களில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டு விடும்.

கொஞ்சம் அஜாக்கிரதை யாக இருந்து சின்னதாக ஒரு கல் தடுக்கினால், ஒரு கனமான பொருள் விழுந்தால் நகம் பெயர்ந்து விடும் அல்லது அதில் அடிபடும்.

இந்தச் சூழலில் என்னென்ன சிகிச்சைகள் செய்யலாம், எப்படிப் பராமரிக்க லாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்...

நகம் பெயர்தல்


நகம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்களி ருந்தாலும், அடிபடுவது தான் மிக முக்கியக் காரணம்.

இது மட்டு மில்லாமல், எந்த வலியும் இல்லாமல் நகம் ஒடிந்து, தானாகவே விழுவதும் (Onycholysis) உண்டு.

இதற்கு பூஞ்சைத் தொற்று (Fungal Infection), சொரியாசிஸ் (Psoriasis) போன்ற பிரச்னை களும் காரணமாகின்றன.

அடிபடுதல்!

சாலை விபத்துகள், கனமான பொருள் காலின் மேல் விழுதல், விளையாடும் போது அடி படுவதாலும் கூட நகம் பெயர்ந்து விடலாம்.

அடிபட்டதில் நகத்துக்கு அடியில் பாதிப்புகள் இருந்தால், அங்கே ரத்தம் தேங்கி உறைந்து, பின்னர் கறுத்துப் போய் விடும்.

சாலை விபத்துகளில் அல்லது பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந் திருந்தால், உடனே மருத்துவ மனைக்குச் சென்று விடுவது நல்லது.

நகத்தில் சின்னதாக ஏற்படும் பாதிப்பு களுக்கு வீட்டிலேயே சில சிகிச்சை களைச் செய்து சரி செய்து விடலாம்.

நகத்தில் அடிபட்டால் செய்ய வேண்டியவை என்னென்ன?

* அடிபட்ட இடத்தைச் சோப் போட்டு, சுத்தமான நீரில் கழுவவும்.

* அடிபட்ட கால் அல்லது கைப் பகுதியை உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.

* நகத்தில் கட்டுப் போட்டு ரத்தம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

* விரலி லிருந்து பெயர்ந்த நகத்தை ட்ரிம் (Trim) செய்யவும் அல்லது வெட்டி விடவும்.

* நகம் பெயர்ந்த இடம் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

* அடிபட்ட நகம் மீண்டும் வளர்வதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். அது வரை அதே இடத்தில் மேலும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பூஞ்சைத் தொற்று (Fungal Infection)

நகத்தின் அடிப்பகுதி யில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டாலும், அது பெயர்ந்து கொள்ளும். அதை குணப் படுத்துவதும் கடினம்.

முதியவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர் களுக்கு அடிபட்டால், நகத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பூஞ்சைத் தொற்றுக் காரணமாக நகம் பெயர் வதற்கான சில அறிகுறிகள்...

* நகம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்துக்கு மாறும்.

* நகத்தின் நுனிப்பகுதி வீக்க மடையும்.

* சிலருக்கு அந்த இடத்தில் சீழ் வடியவும் வாய்ப்பு உண்டு.

* நகம் மிக எளிதாக உடையும் தன்மை யிலிருக்கும்.


இதை குணப் படுத்த பூஞ்சைக் கொல்லி மருந்து களை பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டி வரலாம்.

பூஞ்சைத் தொற்றி லிருந்து தப்பிக்க சில வழிகள்...

* நகத்துக்கு அடியில் மண் அல்லது தூசிகள் சேராமல் பார்த்துக் கொள்ளவும்.

* வளரும் நகங்களை முறையாக அவ்வப் போது வெட்டி விடவும்.

* கால்களை ஈரமில்லாமல் அவ்வப் போது உலர்வாக வைத்துக் கொள்ளவும்.

* கை, கால் நகத்தில் அடி பட்டால் முறை யான சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

சொரியாசிஸ்

சொரியாசிஸ், நீண்ட காலத்துக்கு நோய் தடுப்பு மண்டல த்தில் ஏற்படும் குறை பாட்டால் உண்டாவது. சிலருக்கு வரும் சொரியாசிஸ் நகங் களையும் பாதிக்க லாம்.

இந்த நோயில் நகத்துக்கு அடியிலி ருக்கும் தோல் செல்கள் இறந்து போவதால், நகம் தனியாகப் பிரிந்து, சில நாள்களில் விழுந்து விடும்.

சொரியாசிஸு க்கு சிகிச்சை செய்து கொள்வதோடு, நகங்களை அவ்வப் போது வெந்நீரில் நனைப்பது அதைக் காப்பாற்ற உதவும்.

நகத்தை நீக்குவது

நகத்தை எப்போது நீக்குவது?

நகம் கொஞ்ச மாக ஒட்டிக் கொண்டிரு க்கும் போது அதை முழுமை யாக நீக்க முயற்சிக்கக் கூடாது.

அது வளரும் போது பாதிக்கப் பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்ச மாக விடுபடத் தொடங்கும்.

அப்போது, விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி, பெயர்த்துக் கொண்டு வரும் நகத்தின் முனைப் பகுதியை மென்மையாக்கி விட வேண்டும்.


மேலும் அதோடு அடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெயர்ந்த நகத்தை முறையாகப் பராமரிக் காமல் விட்டு விட்டால் அங்கே நோய் தொற்று ஏற்பட்டு, காயத்தை ஆறவிடாமல் தடுத்து விடும்.

நகத்தில் நோய் தொற்று ஏற்பட்ட தற்கான அறிகுறிகள்...


* சீழ் வருதல்

* காய்ச்சல்

* அதிகமாக வலித்தல்

* வீக்கம், சிவந்துபோதல்.

நகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால், நகத்தை முழுமை யாக இழக்கவும் நேரிடலாம். எனவே நகங்களை முறையாக வீட்டில் பராமரிப்பது சிறந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)