வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?

0
சிலருக்கு வாய் அதிகமாக வறட்சியடையும். பொதுவாக வாய் வறட்சி அடைவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கும். 
வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?
ஆனால் ஒருவருக்கு வாய் அதிகம் வறட்சி யடைவதற்கு அவர்களது உடலில் இருக்கும் வேறு சில பிரச்சனைகளும் காரணம் என்பது தெரியுமா?

எனவே நீங்கள் அதிகமாக வாய் வறட்சியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். 

அதற்கு முன் எதனால் எல்லாம் வாய் அதிகம் வறட்சியடைகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மருந்துகள்

சளி இருமலுக்கு எடுக்கும் ஆன்டி - ஹிஸ்டமைன் மருந்து மாத்திரைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், 

வயிற்றுப் போக்கு, பர்கின்சன் நோய் போன்ற வைகளுக்கு எடுக்கும் மருந்து களாலும் வாய் அதிகம் வறட்சி யடைக்கூடும்.
புகையிலை மற்றும் மது

புகையிலை மற்றும் மது போன்ற வற்றை அதிகம் உபயோகித் தால், உமிழ்நீர் சுரப்பிகள் வறட்சி யடைந்து, வாயை எப்போதும் வறட்சி யுடனேயே வைத்துக் கொள்ளும்.

சைனஸ் பிரச்சனை

சைனஸ் பிரச்சனை இருப்பவர் களால் நிம்மதியாக மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாது. 

அவ்வப்போது வாயின் வழி யாகவும் சுவாசிப்ப தால், அதன் காரணமாக வாய் அதிகம் வறட்சி யடையும்.

புற்றுநோய் சிகிச்சைகள்

புற்றுநோய் சிகிச்சை களான கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி போன்ற வற்றை மேற்கொண் டால், அதன் காரண மாகவும் வாய் வறட்சி யால் அவஸ்தைப் படக்கூடும்.

இதர பிரச்சனைகள்
வாய் வறட்சி என்பது ஒரு நோய் இல்லா விட்டாலும், அது உடலில் இருக்கும் ஒரு பிரச்சனை யின் அறிகுறி என்பதை மறவாதீர்கள். 

அதுவும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற வற்றின் அறி குறிகளுள் ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)