தமிழகத்தில் இந்தியாவை மிரள வைக்கும் கிராமம் !

0
தமிழகத்தில், இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலை யங்களில் வழக்கு உள்ளது.
தமிழகத்தில் இந்தியாவை மிரள வைக்கும் கிராமம் !
திருச்சி அருகேயுள்ள ராம்ஜி நகரைச் சேர்ந்த வர்கள், குலத் தொழில் போல கொள்ளை யடிக்கும் தொழிலைச் செய்கிறார்கள். 

ஆந்திராவை பூர்வீக மாகக் கொண்ட இவர்கள், 'கேப்மாரிஸ்' என்கிற இனத்தைச் சேர்ந்த வர்கள். இந்த இன மக்களுக்கு திருடுவது தான் குலத் தொழில். 

சுதந்திரத் துக்கு முன், கரூர் அருகே தங்கிய இந்த மக்கள், அருகி லுள்ள கிராமங் களில் கைவரிசை காட்டத் தொடங்கி யிருக்கி றார்கள். 

திருட்டுத் தொல்லைத் தாங்காமல், கிராமத்தினர் இவர் களை விரட்டி அடித்து ள்ளனர். அப்போதையை திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த மக்களுக்கு ராம்ஜி மில்லில் வேலை வாங்கிக் கொடுத்து தங்கவும் இடமளித் துள்ளார். 

அப்படித் தான் ராம்ஜி நகர் உருவானது. மில்லில் வேலைக்குச் சேர்ந்தாலும், திருட்டுத் தொழிலை இவர்களால் விட்டு விட முடிய வில்லை. 
அந்தக் காலத்தில் பர்மா, மலேசியாவு க்கு வேலைக்குப் போவது போல, இவர்கள் கொள்ளைத் தொழிலில் அங்கெல்லாம் சென்று ஈடுபட்டிருக் கிறார்கள். 

இவர்களின் செல்வச் செழிப்பைப் பார்த்து, மற்ற மக்களும் கொள்ளையர் களாக மாறிய வரலா றெல்லாம் உண்டு. 

இந்தியா முழுவதும் குழுக் குழுவாகச் சென்று கைவரிசை காட்டும் இவர்கள், திருடப் போவதற்கு முன், சொந்தக் கிராமத்தில் உள்ள கடவுளுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள். நல்ல நாள் பார்த்து தான் திருடப் போவார்கள். 

திருடி விட்டு வந்ததும், கன்னியாகுமரி சென்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, முக்கடலும் சங்கமிக்கு மிடத்தில் கால்களைக் கழுவி, தங்கள் பாவங் களைப் போக்கிக் கொள்வதாக, இதை வழக்கமாகக் கொண் டுள்ளனர்.
ஆனால் இந்த மக்கள், கொள்ளை யில் ஈடுபடுவதோடு சரி. கொலை செய்வ தில்லை. போலீஸ் தங்கள் மீது சந்தேகப் பட்டால், போலி நபரை கைதாக வைத்து விடுகிறார்கள். 

கைதாகும் நபரின் குடும்பத்துக்குத் தேவையான பணத்தையும் பிற வசதி களையும் செய்து கொடுக்கிறார்கள். அப்படி, போலீஸிடம் சரண் அடைபவர் களைக் 'கொன்னையன்' என்கிறார்கள். 

கொள்ளை யடிக்கப் போவதை 'வல்லடை க்குப் போகிறோம்' என்று சொல் கிறார்கள். இந்தியா முழுவதும் சென்று, குழுக் குழுவாக கைவரிசை காட்டும் இவர்கள், தெலுங்கு கலந்த தமிழில் தான் உரையாடு கிறார்கள். 

ஒரே நேரத்தில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட வர்கள் கிளம்பி கொள்ளை க்குப் போவார்கள். அந்தச் சமயத்தில், ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ராம்ஜி நகர் வெறிச்சோடிக் கிடக்கும்.

2014-ம் ஆண்டு, திருவனந்தபுர த்தில் ஒரு நகைக் கடையில் கொள்ளை நடந்தது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் கைவரிசை காட்டியிருக் கின்றனர் என்பதை 
மோப்பம் பிடித்த கேரள போலீஸ், ராம்ஜி நகரைச் சுற்றி கண் காணிப்பைப் பலப்படுத்தி யிருந்தது. அதே வேளையில், ஆந்திர போலீஸ் மற்றொரு கேஸுக்காக அங்கே முகாமிட்டி ருந்தது. 

இப்படி, பல மாநில போலீஸும் ஒரே நேரத்தில் பொறி வைத்துக் காத்திருக்கும் கிராமம் தான் ராம்ஜிநகர். ராஜஸ்தானில் தமிழக போலீஸார் சந்தித்தது போன்ற மோதலும் இந்த கிராமத்தில் நிகழ்ந் துள்ளது. 

ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள் குறித்து துப்புக் கொடுப்பதற் காக பல குழுக்கள் இயங்கி வருகின்றன.
ராஜஸ்தானில், கொள்ளை யர்கள் சொகுசு பங்களா கட்டி வாழ்வது போல, இந்தக் கிராமத் திலும் பல சொகுசு வீடுகள் காணப்படு கிறது. பிள்ளை களை இன்ஜினீயரிங், மருத்துவம் கூட படிக்க வைத்துள்ளனர். 

3 ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக இந்தக் கிராமத்தில் வீடுகள் கட்டப்பட வில்லை. பெரிய பெரிய இரும்பு கேட்டு களுடன் வீடுகள் காணப்படு கின்றன. 

போலீஸார் எளிதில் உள்ளே நுழைந்து விட முடியாதபடி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடு களுடன் வீடுகள் கட்டுப் பட்டுள்ளன. கேரள போலீஸ் எடுத்த நடவடிக்கை யில் மித்ர மோகன், சத்யாக ஆகியோர் பிடிபட்டனர். 
இதில், மித்ர மோகனின் வீடு கிட்டத் தட்ட குட்டி அரண்மனை போல காணப் பட்டது. அத்தனை அறைகளும் ஏ.சி வசதி செய்யப் பட்டுள்ளன. அவரிட மிருந்து 5 லட்சம் ரூபாயையும் கேரள போலீஸ் கைப்பற்றியது.
இந்தியா முழுவதும் பல போலீஸ் ஸ்டேஷன் களில் வழக்குகள் இருந்தாலும், இவர்கள் எளிதில் சிக்கி விடுவ தில்லை. சாட்சி யங்கள் இல்லாமல் கொள்ளை யடிப்பதில் கில்லாடிகள். 

வெளி மாநில மீடியாக்கள் 'ராம்ஜி நகர் கேங்க்' என்றே இவர்களைப் பற்றி செய்திகள் வெளியிடு கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings