இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது... தினகரன் !

0
என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர் பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்து விட்டார். இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறி யுள்ளார்.
இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது... தினகரன் !
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதற் கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிட மிருந்து பெற்றார் டிடிவி தினகரன்.

அதற்குப் பிறகு சென்னை ராணிமேரி கல்லூரியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெறக் காரணமாக இருந்த தொண்ட ர்களுக்கும், எனக்காக வாக்களித்த வர்களுக்கும் நன்றி. 

ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ஆர்.கே.நகர் மக்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் தொடருவேன். ஜெயலலிதா வீடியோவு க்கும் தேர்தலு க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

வீடியோ வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேலைக் கண்டித்தேன். அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஆர்.கே. நகரில் தொடங்கும் என்று ஏற்கெனவே சொன்னேன். அது நடந்திருக்கிறது.
காவல்துறை ஏவல் துறையாக நடக்கக் கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத் திற்குரியது.

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர் பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்து விட்டார். இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று தினகரன் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings