தேர்தல் வெற்றி... தினகரன் கூட்டு சதி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் !

0
ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கி யுள்ளனர் என்று 
தேர்தல் வெற்றி... தினகரன் கூட்டு சதி..  ஈபிஎஸ், ஓபிஎஸ் !
முதல்வர் பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் குற்றம் சாட்டி யுள்ளனர்.

மேலும், தினகரனும், திமுகவும் செய்த சதியின் வெளிப்பாடாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமைந்து ள்ளது என்றும் அவர்கள் கூறி யுள்ளனர்.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனி சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வெளியிட்ட கூட்டறி க்கையில், 

 ''தமிழக த்தில் இது வரை எந்த ஒரு தொகுதியி லும் சந்தித்திராத படு தோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றி ருக்கிறது. 

ஆர்.கே.நகரில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை திமுகவுக்கு எப்படி ஏற்பட்டது 

என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்கு கிறார்கள். திமுகவும் டிடிவி தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டு சதியை அறிந்து பதவிக்காக இப்படியும் செய் வார்களா என மக்கள் கேள்வி எழுப்பு கிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை தோற் கடிப்பதன் மூலம் ஒன்று பட்டு அசைக்க முடியாத சக்தியாக நிற்கும் அதிமுக வின் வெற்றி வாய்ப்பை பறித்து விட வேண்டும், 

ஜெயலலிதா வின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு தினகரனும், திமுக வும் செய்த சதியின் வெளிப் பாடாக இந்த தேர்தல் முடிவு அமைந் துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும், தினகரனும் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன் பாட்டின விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள். 

தனக்கு ஒரு கண் போனாலும் பரவா யில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் 

தனது வாக்கு வங்கியை தினகரனு க்கு திருப்பி விட்டு அவரை வெற்றி பெறச் செய்திரு க்கிறது திமுக. இது தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்திரு க்கிறது.
திருமங்கல த்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் ஃபார்முலா என்ற புதிய சொல்லை திமுக உருவாக் கியது. 

அதே வழியில் ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத் தினர் உருவாக்கி யுள்ளனர்.

ஆர்.கே.நகரில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த தினகரன் குழுவினர், பிரச்சா ரத்தின் கடைசி நாளில் 20 ரூபாய் தாள்களை 

வீடு வீடாக வாக்காளர் களுக்கு கொடுத்து வெற்றி பெற்றதும் ரூ.10 ஆயிரம் வழங்கப் படும் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளனர். 
தினகரனின் இந்த வெற்றி அதிமுகவுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடை வையோ ஏற்படுத் தாது. அதிமுகவை பிளவு படுத்தவோ, அசைத்து விடவோ முடியாது. 

ஜெயலிதா வுக்கு பெருமை சேர்க்கும் வகையில் எங்கள் பணிகளை தொடர்வோம் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings