பேரியாட்ரிக் சிகிச்சை செய்வது நல்லதா கெட்டதா?





பேரியாட்ரிக் சிகிச்சை செய்வது நல்லதா கெட்டதா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
அனைத்து வகையிலும் தொந்தரவான, உடல் நலத்துக்கு எதிரான ஒன்றாக இருப்பது உடற் பருமன். முறையற்ற நமது வாழ்வியல் முறைக்குக் கிடைக்கும் பரிசு இது.
பேரியாட்ரிக் சிகிச்சை செய்வது நல்லதா கெட்டதா?

நவீன அறிவியல் வளர்ச்சியில் எதுவும் சாத்தியம் என்பதன் அடிப்படை யில் உடல் எடை குறைப்பும் சாத்தியம் தான். 

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் அளவுக் கதிகமான உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கி யமான வாழ்வை சாத்தியப் படுத்தலாம் என்கி றார்கள் மருத்துவர்கள். 

இது போன்ற சிகிச்சைகள் உயிரைப் பறித்து விடும் என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது. அதனை உறுதிப் படுத்துவது போல் இச்சிகிச்சை மேற்கொண்ட சிலர் உயிரி ழக்கவும் செய்திருக் கின்றனர்.

ஆனால், அந்த உயிரிழப்பு வேறு காரணங் களால் நிகழ்ந்தது என்று விளக்கமும் அளிக்கப் பட்டிருக் கிறது. உடற்பருமன் இன்றி வாழ என்ன தான் தீர்வு? 

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை குறித்து இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் விளக்க மாகவே பதில் சொல்கிறார். 

‘‘Morbid obesity என்று சொல்லக் கூடிய, மரணத்தை ஏற்படுத்தக் கூடிய உடற் பருமன் கொண்டவர் களுக்குத் தான் இச்சிகிச்சை தேவைப்படும். 

இதன் நோக்கம், உடற் பருமனால் ஏற்படும் மரணத் திலிருந்து காப்பது தானே தவிர மரணத்தை ஏற்படுத்து வதல்ல. ‘பேரியாட்ரிக்’ அறுவை சிகிச்சை மீது பலருக்கும் தவறான புரிதலே இருக்கிறது. 

இது உடல் எடை குறைந்து அழகாகத் தெரிவதற் காக மேற்கொள் ளப்படும் சிகிச்சை என்றே நினைக் கிறார்கள். இச்சிகிச்சை மரணத் துக்கு வழி வகுக்கும் என்பது போன்ற தவறான எண்ணங் களும் விதைக்கப் பட்டிருக் கிறது. 

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உடற் பருமனாக உள்ள அனைவ ருக்கும் இச்சிகிச்சை வேண்டிய தில்லை. இச்சிகிச்சைக் கென உலக சுகாதார நிறுவனம் பல விதி முறைகளை வகுத்திருக்கிறது. 

அதன்படி உயரத்துக் கேற்ற எடை இருக்கிறதா? எனக் கணக்கிடும் BMI (Body Mass Index)ஐப் பொறுத்து சிகிச்சை அளிக்கக் கோருகிறது. அதாவது 160 சென்டி மீட்டர் உயரம் கொண்ட வர்கள் 60 கிலோ எடை கொண்டி ருப்பது சராசரி. 
பேரியாட்ரிக் சிகிச்சை செய்வது நல்லதா கெட்டதா?

ஆசியர் களுக்கு BMI 23.5 புள்ளி இருப்பது சராசரி யான அளவு. ஆனால், அதுவே 37.5 புள்ளியைத் தாண்டும் போது இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இது உடலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர் களுக்குத் தான் பொருந்தும். சர்க்கரை, ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை யுடன் கூடிய உடற்பருமனை co- morbidity என்று கூறுவோம். 

இந்த நிலையில் இருப்ப வர்கள் 32.5 BMI இருந்தாலே இச்சிகிச் சையை மேற் கொள்வது நல்லது. உடற் பருமன் ஏற்படு வதற்கு முறையற்ற உணவுப் பழக்கமும், உடற் பருமனை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்புமே காரணம். 

எனவே இச்சிகிச்சை யில் இரைப் பையைச் சிறிய தாக்கி அதை சிறு குடலுடன் 150 செ.மீ. தள்ளி இணைத்து விடுவோம். இதன் மூலம் அளவுக் கதிகமாக உணவு உட்கொள்ள முடியாது. 

15 இட்லி சாப்பிடுகிற வர்களால் இச்சிகிச்சை க்குப் பின் 2 இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது. தவிர உடற் பருமனை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பும் குறைந்து விடும் என்பதால் எடை குறையும். 

இவ்வளவு உயரம் உள்ள வர்கள் இவ்வளவு கிலோ இருக்க லாம் என்கிற சராசரி எடையை விட 90 கிலோ அதிகம் உள்ளவர் களுக்குக் கூட இச்சிகி ச்சையை மேற் கொண்டிரு க்கிறோம். 

ஆனால், அதில் ரிஸ்க் அதிகம். 90 கிலோவு க்கும் குறைவாக இருப்பவ ர்களுக்கு செய்வதில் எந்த ரிஸ்க்கும் இல்லை. அறுவை சிகிச்சை க்கு முன் பலகட்ட பரிசோதனை கள் மேற்கொள் ளப்படும். 

பிசியோ தெரபிஸ்டைக் கொண்டு நுரையீர லுக்கான பயிற்சி களும் அளிக்கப் படும். சிகிச்சை தொடங்கு வதற்கு முன்பிருந்து சிகிச்சை முடிந்த பின்பும் மருத்துவர் கண் காணிப்பில் இருந்து கொண்டி ருப்பார்கள்.

இச்சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந் தவர்கள் வேறு பிரச்னைக்கு ஆளானவர் களாகத் தான் இருந்திருக் கிறார்கள். இச்சிகிச்சை மரணத்தை ஏற்படுத்தும் சிகிச்சை என்கிற தவறான எண்ணத்தி லிருந்து வெளி வர வேண்டும். 

உலக சுகாதார நிறுவனத் தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உலகில் பல்லாயிரக் கணக்கா னோர் இச்சிகிச்சை மேற் கொண்டு நலமுடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். 

மத்திய அமைச்சர்களான வெங்கைய்யா நாயுடு, நிதின் கட்காரி, அருண் ஜேட்லி ஆகியோரும் இச்சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் என்பதை அறிவித்தி ருக்கிறார் கள். 

இது போன்ற சிகிச்சை முறைகள் அறிவியல் பூர்வமானது தானே தவிர அறிவிய லுக்குப் புறம்பான தல்ல என்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்.

உடற் பருமனைக் கட்டுப் படுத்த அறுவை சிகிச்சை தான் வேண்டுமா? நமது வாழ்விய லின் வழியாகவே உடற் பருமன் ஏற்படாமல் 

தடுக்க முடியும் என்றபடி உடற் பருமனைக் குறைப்ப தற்குமான வழிகளை விளக்கு கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன். 

மரபுத்தன் மையைப் பொறுத்து மனித உடலை வாதம், பித்தம், கபம் என மூன்றாகப் பிரிக்கலாம். கப உடம்புக் காரர்கள் இயல்பிலேயே உடற் பருமனாக இருப்பார்கள். 

மற்றபடி ஏற்படும் உடற் பருமனுக்கு முறை தவறிய நமது வாழ்வியலே காரணமாய் இருக்கிறது. உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங் களை முறைப் படுத்திக் கொண்டாலே உடற் பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும். 

கப உடல்காரர் களும் பருமனைக் கட்டுப் படுத்த முடியும்.

பேரியாட்ரிக் சிகிச்சை செய்வது நல்லதா கெட்டதா?

கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், தேன், மோர் ஆகிய சாத்வீகப் பொருட் களை முதன்மை யாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

நமது இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் இங்கு பல்வேறு வகையான பழங்களுக்கும், காய் கறிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்த தாக சக்தி கொடுக்கக் கூடிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டாகப் பிரிக்கலாம். 

முதலாவது ரத்த சர்க்கரை அளவை அதிகப் படுத்தி உடனடி யாக சக்தி அளிப்பவை. அரிசி, கோதுமை போன்ற தானி யங்களும், மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளும் இதில் அடக்கம். 

ஆனால், இதைக் குறைந்த அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது நிதான மாக சக்தி கொடுக்கக் கூடியவை.

கேழ்வரகு, சாமை, தினை, வரகு, சின்ன சோளம், குதிரை வாலி, கருப்பரிசி, சிவப்பரிசி, கவுனி, மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் அரிசி ஆகிய அருந்தானி யங்கள் நிதானமாக சக்தியைக் கொடுக்கும். 

இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. முட்டை, கறி, எருமைப் பால், எருமைத் தயிர் மற்றும் எண்ணெய் பொருட் களை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. 

மேலை நாட்டு உணவான பீட்சா, பர்கர் ஆகிய வற்றைச் சாப்பிடுவ தால் தான் உடற் பருமன் ஏற்படு கிறது என்று நினைக்கி றார்கள். 

பால் பேடா, இனிப்புப் பொருட்கள், போண்டா, பஜ்ஜி, சமோசா, கட்லெட் போன்ற இந்திய நொறுக்குத் தீனிகள் கூட உடல் எடையை அதிகரிக்கும். 

எனவே இது போன்ற உணவு களையும் கட்டுப் படுத்த வேண்டும். உடல் உழைப்பு இல்லாதது உடற் பருமனுக்கு முக்கியக் காரணமா கிறது. 

எனவே, நடை பயிற்சி, வீட்டு வேலைகள் செய்தல், நீச்சல் பயிற்சி, மலை யேறுதல், ஜாகிங் போன்ற வற்றை இரு பாலினரும் மேற்கொள்ள வேண்டும். 

மன அழுத்த த்தில் இருக்கும் போது நொறுக்குத் தீனிகள் அதிகம் சாப்பிடத் தோன்றும். Compulsive eating எனப்படும் இது போன்று கட்டாயத் துக்காக உணவு உட்கொள் வதை நிறுத்த வேண்டும். 

பசியைக் கட்டுப் படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். கள்ளி முளையான் போன்ற சில மூலிகைகள் பசியைக் கட்டுப் படுத்தும் தன்மை யுடையவை. 

புளிச்சக் கீரை, கொடம்புலி, கோக்கம் ஆகிய வற்றி லிருந்து வெளியாகும் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் பசியைக் கட்டுப் படுத்தும். உடலில் ரத்த சோகை இருந் தாலும் உடற் பருமன் ஏற்படும். 

இரத்த சோகையைத் தீர்க்கும் மாதுளை, முருங்கைக் கீரை, மணத் தக்காளிக் கீரை, பேரீச்சை ஆகிய வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அனைவரும் இது போன்ற உணவுப் பழக்க த்தை மேற்கொள்ளும் போது உடற் பருமனைத் தடுக்க முடியும். அப்பிரச்னை க்கு ஆளான வர்களுக்கு மேற்சொன்ன மூலிகைகள் மருந்து களாகக் கிடைக்கின்றன. 

அதனை உட்கொள்ளலாம். ஆராய்ச்சி செய்யப் பட்டு விற்பனைக்கு வரும் அந்த மருந்து களால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. 
பேரியாட்ரிக் சிகிச்சை செய்வது நல்லதா கெட்டதா?

பல காரணங்களால் உடல் எடை கூடுகிறது. அது என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அதன்பின் மருத்துவ ஆலோசனை யுடன் உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்...என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன். 

உடற் பருமனுக் கான சிகிச்சை எப்படி அவசியமோ அதை விட உடற் பருமன் ஏற்படாத வகையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதும் அவசியம். 

‘பேரியாட்ரிக்’ அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் உங்கள் குடும்ப டாக்டரிடம் ஒன்றுக்கு இரு முறை ஆலோசனை கேளுங்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)