ஆம்புலன்ஸ் தாமதம்... மாணவி உயிரிழப்பு !

0
ஆம்புலன்ஸ் வர தாமதமான தால், காஞ்சிபுரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆம்புலன்ஸ் தாமதம்... மாணவி உயிரிழப்பு !
காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகள் சரிகா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த சரிகாவுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது.

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.

நேற்று மதியம் சரிகாவின் உடல் நிலை மோசமான தால் சென்னை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் பரிந்துரைத் துள்ளார்.

உடனடி யாக ‘108’ ஆம்புலன்சு க்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் வரை ஆம்புலன்ஸ் வேன் வரவில்லை. இதனால் தவித்த சரிகாவின் பெற்றோர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் தெரிவித்தனர்.

கலெக்டரின் நடவடி க்கையை அடுத்து சுமார் 7 மணி நேர காத்தி ருப்புக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வேன் சரிகாவை அழைத்து செல்ல வந்தது. சென்னை நோக்கி வரும் போது போரூர் அருகே சரிகா பரிதாப மாக உயிரி ழந்தார்.

மருத்துவ மனையில் 3 ஆம்புலன்ஸ் கள் இருந்தும், மாணவியின் உடல் நிலையை கவனத்தில் கொள்ளாமல் சிறு விபத்து நேரிடும் பகுதிக ளுக்கு தொடர்ச்சியதாக ஆம்புலன்சை பயன் படுத்தியதாக குற்றம் சாட்டப் படுகிறது.
ஆம்புலன்ஸ் வசதி பெறுவதில் தாமத மானது குறித்து சம்மந்தப் பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறி யுள்ளது.

இந்நிலை யில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் இன்பசேகரன், இன்று காலை காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு வந்து ஆய்வு நடத்தினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings